பதிவு செய்த நாள்
27 மே2016
07:07
ஐதராபாத் : ஆந்திராவில், துறைமுக கட்டுமான திட்டத்தை செயல்படுத்த, அதானி உட்பட, மூன்று நிறுவனங்களிடம் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநில அரசு, ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில், பாவனபாடு பசுமை துறைமுகத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கான இறுதி கட்ட டெண்டரில், கங்காவரம் போர்ட் லிமிடெட், சி.வி.ஆர்., குழுமத்தின் நவயுகா மற்றும் அதானி ஆகிய மூன்று நிறுவனங்களுக்கிடையே மிகக் கடுமையான போட்டி ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து, ஆந்திர அரசின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பாவனபாடு துறைமுக திட்டம், நிலம் கையகப்படுத்தும் பணியால் தாமதம் ஏற்பட்டது. இதனால், திட்டத்திற்கு தேவையான நிலத்தின் அளவு குறைக்கப்பட்டது. இந்த திட்டத்தை யாரிடம் ஒப்படைப்பது என்பது, ஜூன், 30ம் தேதி தெரிய வரும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|