பதிவு செய்த நாள்
27 மே2016
07:08
புதுடில்லி : நடப்பு நிதியாண்டில், 16 நிறுவனங்களின் பங்கு வெளியீட்டுக்கு, ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது. நடப்பு நிதியாண்டில், இதுவரை, எல் அண்டு டி இன்போடெக், நிகிலென்ட் டெக்னாலஜிஸ், ஜி.வி.ஆர்., இன்ப்ரா புராஜெக்ட்ஸ் உள்ளிட்ட, 16 நிறுவனங்கள், பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்டி கொள்ள, ‘செபி’ அனுமதி அளித்துள்ளது. இந்த நிறுவனங்கள், 2015 செப்., முதல், 2016 ஏப்., மாதம் வரையிலான காலகட்டத்தில், செபியிடம் ஒப்புதல் கேட்டு விண்ணப்பித்து இருந்தன.கடந்த ஜன., மற்றும் மே மாதங்களில் ஒப்புதல்கள் வழங்கப்பட்டன. 16 நிறுவனங்களில், ஈக்யூடாஸ் ஹோல்டிங்ஸ், தைரோகேர் டெக்னாலஜிஸ், உஜ்ஜிவன் பைனான்ஸ்சியல் ஆகிய நிறுவனங்கள், பங்குகளை வெளியிட்டு, 3,500 கோடி ரூபாய் நிதி திரட்டி உள்ளன. எஞ்சிய நிறுவனங்கள், 5,200 கோடி ரூபாய் நிதி திரட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|