பதிவு செய்த நாள்
28 மே2016
05:08
புதுடில்லி : இன்டெல் இந்தியா நிறுவனம், மத்திய அரசுடன் இணைந்து, ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக, மின்னணு கல்வி பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, ஹரியானாவில் உள்ள கர்னல் என்ற புறநகர் பகுதியில், முதன் முதலாக, மின்னணு கல்வி பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்கள், கணினி சார்ந்த செயல்முறை பயிற்சி பெற, இந்த மையம் உதவும். இதுபோல், தெலுங்கானாவில், ஏற்கனவே, 10 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, 10 மாநிலங்களில், 100 மின்னணு கல்வி பயிற்சி மையங்களை திறக்க, இன்டெல் திட்டமிட்டுள்ளது. இத்துடன், ‘டிஜிட்டல் உன்னட்டி’ என்ற வலைதளமும், அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், கிராமத்தில் உள்ள தொழில்முனைவோர்கள், கணினியை எப்படி ஒருங்கிணைப்பது என்பது உள்ளிட்ட பயிற்சியை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|