பதிவு செய்த நாள்
31 மே2016
07:32
புதுடில்லி : ‘‘இழப்பை சந்தித்து வரும், இந்திய சுற்றுலா கழகத்தின், 14 ஓட்டல்களை விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’’ என, மத்திய சுற்றுலா மற்றும் கலாசார துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:டில்லி, புதுச்சேரி, பாட்னா, மைசூரு, போபால் உள்ளிட்ட 16 இடங்களில், இந்திய சுற்றுலா கழக ஓட்டல்கள் உள்ளன. அவற்றில், டில்லியில் உள்ள, அசோகா, சாம்ராட் ஓட்டல்கள் தவிர்த்து, இதர 14 ஓட்டல்களை விற்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இழப்பில் உள்ள இந்த ஓட்டல்களில், மத்திய அரசின் பங்குகளை விற்பதற்கான பணிகளை, மத்திய நிதியமைச்சகம் ஏற்கனவே துவக்கி விட்டது.‘வியத்தகு இந்தியா’ விளம்பர துாதரை நியமிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை. கூடுதலாக சில முக்கிய அம்சங்களை சேர்க்கும் பொருட்டு, புதிய சுற்றுலா கொள்கை அறிவிப்பு, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது, சர்வதேச சுற்றுலா பயணிகளின் வருகையில், இந்தியாவின் பங்கு, 0.68 சதவீதமாக உள்ளது. இதை, 2020ல், 1 சதவீதமாகவும், 2025ல், 2 சதவீதமாகவும் உயர்த்த, புதிய சுற்றுலா கொள்கை துணை புரியும். மேலும், தேசிய சுற்றுலா பல்கலைக்கழகம் அமைக்கும் திட்டமும், அரசின் பரிசீலனையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த, 1999 – 2004ல், பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, இழப்பை கண்டு வந்த, 18 இந்திய சுற்றுலா கழக ஓட்டல்களின் பங்குகளை, விற்பனை செய்தது. இதையடுத்து, ஓட்டல்களின்எண்ணிக்கை,34ல் இருந்து,16 ஆக குறைந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|