பதிவு செய்த நாள்
01 ஜூன்2016
07:37
புதுடில்லி : ‘பிளிப்கார்ட்’ நிறுவனம், மின்னணு, வீட்டு உபயோக சாதனங்கள், மரச் சாமான்கள் போன்ற பிரிவுகளில், அதிக தொகையிலான பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, செயல்முறை கட்டணம், டவுன் பேமென்ட், வட்டி போன்றவை எதுவும் இல்லாத தவணை வசதி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.பிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்த, ‘நோ காஸ்ட் இ.எம்.ஐ.,’ என்ற திட்டத்துக்காக, பஜாஜ் பின்சர்வ் நிறுவனம், பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் மற்றும் பிளிப்கார்ட் ஆகியவை கைகோர்த்துள்ளன.இதுகுறித்து, பிளிப்கார்ட் அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்தியாவில், 1 சதவீதம் பேர் தான், கடன் அட்டை மூலம் பொருட்களை வாங்குகின்றனர். மற்றவர்கள் வங்கிகள் மூலமாக, தாமதமாக வாங்குகின்றனர். இனி, எங்களின் இந்த திட்டத்தின் மூலம், சலுகைகளுடன் எளிதாக பொருட்களை வாங்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|