பதிவு செய்த நாள்
06 ஜூன்2016
06:48
எண்ணங்களின் ஆற்றலில் தான் எல்லாம் இருக்கிறது எனும் கருத்தை முன்வைக்கிறது தனிநபர் உலகில் சிறு காவியம் என வர்ணிக்கப்படும், ‘தி சயின்ஸ் ஆப் கெட்டிங் ரிச்!’ வாலெஸ் டி வாட்டல்ஸ், எழுதிய இந்த புத்தகம் காலத்தை கடந்து நின்று வளர்ச்சி மற்றும் செல்வத்தை அடைவதற்கான ஊக்கம் அளிக்கிறது.செல்வ செழிப்பு பெறுவதற்கு ஒரு அறிவியல் இருக்கிறது. அல்ஜீப்ரா அல்லது கூட்டல் கழித்தல் போல அதுவும் துல்லியமான அறிவியல்தான். செல்வம் சேர்வதை தீர்மானிக்கும் விதிகள் சில இருக்கின்றன. இந்த விதிகளை கற்றுக்கொண்டு அவற்றுக்கு கீழ்படிந்து நடக்கும் போது அவர் கணிதவியல் துல்லியத்துடன் பணக்காரராகலாம்.செயல்களை குறிப்பிட்ட விதத்தில் செய்வதன் மூலம் பணம் மற்றும் சொத்தின் உரிமை வருகிறது. தெரிந்தோ, தெரியாமலோ குறிப்பிட்ட விதமாக செயல்படுபவர்கள் பணக்காரர்களாகின்றனர். இதுவும் இயற்கையான விதிகளை போன்றது தான். எனவே, இந்த விதிகளை கற்பவர்கள் நிச்சயம் பணக்காரராகலாம்.பணக்காராவது சூழ்நிலை பொருத்தது அல்ல. அப்படி இருந்தால் குறிப்பிட்ட பகுதியில் உள்ள எல்லாரும் செல்வந்தராகி இருக்க வேண்டும். ஆனால், எல்லா இடங்களிலும் பணக்காரர்களும், ஏழைகளும் இருக்கின்றனர். எனவே, சூழலை விட செயல்படும் விதத்தில் தான் இது இருக்கிறது.மேலும், குறிப்பிட்ட விதமாக செயல்படுவது திறமை சார்ந்தது மட்டும் அல்ல. ஏனெனில் திறமை வாய்ந்த பலர் ஏழையாகவே இருக்கின்றனர். செல்வந்தராவது சேமிப்பினால் அல்லது மற்றவர்கள் செய்யாததை செய்வதால் வருவதும் அல்ல. ஆனால், எல்லாவற்றையும் குறிப்பிட்ட நோக்கில் செய்வதால் வருவது.உலகில் வாய்ப்புகளுக்கு குறைவில்லை. எதிர்நீச்சல் போடுவர்களுக்கு அவை தயாராக உள்ளன. செல்வந்தராவதற்கான வளங்கள் இயற்கையில் கொட்டிக்கிடக்கின்றன. வடிவமில்லா சக்தியாக அவை நிறைந்திருக்கின்றன.வடிவமில்லா சக்தி என்பது அறிவு சார்ந்தது. அது தான் சிந்திக்கிறது. அது தான் மேலும் என விழைகிறது. உயிர்களின் மேம்பாட்டிற்காக தான் இயற்கை இருக்கிறது. எண்ணங்கள் தான் மிகவும் முக்கியம். மனிதன் தனது எண்ணங்கள் மூலம் மற்றும் அவற்றை வடிவமில்லா சக்தி மீது செலுத்துவதன் மூலம் தான் நினைப்பவற்றை உருவாக்க முடியும்.ஒருவர் சிந்திக்கும் விதமே அவர் செயல்படும் விதத்தை தீர்மானிக்கிறது. நீங்கள் செய்ய விரும்பும் வகையில் சிந்திக்க வேண்டும் என்பது தான் முக்கியம். நம்பிக்கை தான் எல்லாவற்றுக்கும் மூலம்.உங்கள் செயல்களை தீர்மானிக்கும் வகையில் செல்வந்தராக வேண்டும் எனும் விருப்பம் உங்களுக்கு உறுதியாக இருக்க வேண்டும். மனதளவில் உருவகப்படுத்திக் கொண்டீர்கள் என்றால் விரைவில் அதை நிஜத்தில்அடையலாம். உங்கள் மனதில் உருவாகும் சித்திரத்தை நம்பிக்கையுடன் நெஞ்சில் நிறுத்திக்கொள்ளுங்கள். நேற்றைய செயல்கள் பற்றி கவலைப்படாமல் இன்றைய செயல்களை சிறப்பாக செய்வதில் கவனம் செலுத்துங்கள்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|