பதிவு செய்த நாள்
24 ஜூன்2016
07:02
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த, 27 வங்கிகளை இணைத்து, 4 அல்லது 5 பெரிய வங்கிகளாக உருவாக்கும் திட்டம் குறித்து, மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து, நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொதுத் துறையைச் சேர்ந்த, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன், அதன் 5 துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கியை இணைக்க, மத்திய அமைச்சரவைக் குழு, சமீபத்தில் ஒப்புதல் அளித்துஉள்ளது.
ஒருமித்த கருத்துஇந்த இணைப்பு பணிகள், நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் முடிவடையும். அதன் பின், பொதுத் துறை வங்கிகளை ஒன்றிணைத்து, 4 அல்லது 5 பெரிய வங்கிகளாக உருவாக்கும் திட்டம் துவங்கும். அதற்கு முன்பாக, அனைத்து வங்கிகளின் தொழிற்சங்கங்களுடன் பேசி, ஒருமித்த கருத்து எட்டப்படும். மத்திய அரசு, ‘இந்திர தனுஷ்’ என்ற திட்டத்தின் கீழ், பொதுத் துறை வங்கிகளில், 70 ஆயிரம் கோடி ரூபாய் பங்கு மூலதனம் மேற்கொள்ளும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி, கடந்த நிதியாண்டில், 25 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதே அளவிலான தொகை, நடப்பு நிதியாண்டிலும் வழங்கப்படும். அடுத்த இரு நிதியாண்டுகளில், தலா, 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
பெரிய வங்கிகளாக...இதுதவிர, ‘பேசல் – 3’ விதிமுறைகளை பின்பற்றுவதற்காக,பொதுத் துறை வங்கிகள், அவற்றின் பங்கு மூலதனத்தை உயர்த்திக் கொள்ள, நிதிச் சந்தையில், 1.10 லட்சம் கோடி ரூபாய் திரட்ட வேண்டும். இதன் மூலம் வலுப்பெறும் வங்கிகளை ஒன்றிணைத்து, விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில், மிகப்பெரிய வங்கிகளாக மாற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பொதுத் துறை வங்கிகளை ஒன்றிணைத்து, விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில், மிகப் பெரிய வங்கிகளாக மாற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|