தொழில் முனை­வோர்­க­ளுக்கு வாய்ப்பு; சென்­னையில் இணைப்பு கூட்­டங்கள்தொழில் முனை­வோர்­க­ளுக்கு வாய்ப்பு; சென்­னையில் இணைப்பு கூட்­டங்கள் ... தக்­கா­ளி விலை உயர்வால்‘டொமேட்டோ புரீ, கெட்ச்அப்’ விற்­பனை ‘ஜோர்’ தக்­கா­ளி விலை உயர்வால்‘டொமேட்டோ புரீ, கெட்ச்அப்’ விற்­பனை ‘ஜோர்’ ...
வங்­கிகள் இணைப்பு: மத்­திய அரசு அதி­ரடி திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2016
07:02

புது­டில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த, 27 வங்­கி­களை இணைத்து, 4 அல்­லது 5 பெரிய வங்­கி­க­ளாக உரு­வாக்கும் திட்டம் குறித்து, மத்­திய அரசு தீவி­ர­மாக பரி­சீ­லித்து வரு­கி­றது.
இது­கு­றித்து, நிதி­ய­மைச்­சக அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது: பொதுத் துறையைச் சேர்ந்த, ஸ்டேட் பாங்க் ஆப் இந்­தி­யா­வுடன், அதன் 5 துணை வங்­கிகள் மற்றும் பார­திய மகிளா வங்­கியை இணைக்க, மத்­திய அமைச்­ச­ரவைக் குழு, சமீ­பத்தில் ஒப்­புதல் அளித்­துஉள்­ளது.
ஒரு­மித்த கருத்துஇந்த இணைப்பு பணிகள், நடப்பு நிதி­யாண்டு இறு­திக்குள் முடி­வ­டையும். அதன் பின், பொதுத் துறை வங்­கி­களை ஒன்­றி­ணைத்து, 4 அல்­லது 5 பெரிய வங்­கி­க­ளாக உரு­வாக்கும் திட்டம் துவங்கும். அதற்கு முன்­பாக, அனைத்து வங்­கி­களின் தொழிற்­சங்­கங்­க­ளுடன் பேசி, ஒரு­மித்த கருத்து எட்­டப்­படும். மத்­திய அரசு, ‘இந்­திர தனுஷ்’ என்ற திட்­டத்தின் கீழ், பொதுத் துறை வங்­கி­களில், 70 ஆயிரம் கோடி ரூபாய் பங்கு மூல­தனம் மேற்­கொள்ளும் திட்­டத்தை செயல்­ப­டுத்தி வரு­கி­றது. இதன்­படி, கடந்த நிதி­யாண்டில், 25 ஆயிரம் கோடி ரூபாய் வழங்­கப்­பட்­டது. இதே அள­வி­லான தொகை, நடப்பு நிதி­யாண்­டிலும் வழங்­கப்­படும். அடுத்த இரு நிதி­யாண்­டு­களில், தலா, 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­யப்­படும்.
பெரிய வங்­கி­க­ளாக...இது­த­விர, ‘பேசல் – 3’ விதி­மு­றை­களை பின்­பற்­று­வ­தற்­காக,பொதுத் துறை வங்­கிகள், அவற்றின் பங்கு மூல­த­னத்தை உயர்த்திக் கொள்ள, நிதிச் சந்­தையில், 1.10 லட்சம் கோடி ரூபாய் திரட்ட வேண்டும். இதன் மூலம் வலுப்­பெறும் வங்­கி­களை ஒன்­றி­ணைத்து, விரல் விட்டு எண்­ணக்­கூ­டிய வகையில், மிகப்பெரிய வங்­கி­க­ளாக மாற்ற, மத்­திய அரசு திட்­ட­மிட்­டுள்­ளது. இவ்­வாறு அவர் கூறினார்.
பொதுத் துறை வங்­கி­களை ஒன்­றி­ணைத்து, விரல் விட்டு எண்­ணக்­கூ­டிய வகையில், மிகப் பெரிய வங்­கி­க­ளாக மாற்ற, மத்­திய அரசு திட்­ட­மிட்­டுள்­ளது

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)