பதிவு செய்த நாள்
24 ஜூன்2016
12:56
மும்பை : ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற இருப்பதன் எதிரொலியாக உலகளவில் பங்குச்சந்தைகள், கரன்சி மதிப்புகள் சரிவை சந்தித்துள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தைகள் மற்றும் கரன்சி மதிப்புகளும் சரிந்ததோடு மட்டுமின்றி தங்கம் விலையும் ஒரேநாளில் சவரனுக்கு ரூ.1,104 அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது: தற்போதைய நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வருகிறோம். சரிவு நிலையை சமாளித்து முன்னேறுவோம். பிரிட்டன் முடிவால் இந்திய வர்த்தகம் பாதிக்கப்படாது, எதையும் சமாளிக்க அரசும், ரிசர்வ் வங்கியும் தயார் நிலையில் இருக்கிறது என்றார்.
ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறுகையில், உலகம் முழுவதும் உள்ள சந்தை நிலையை கண்காணித்து வருகிறோம். மற்ற நாடுகளின் கரன்சி மதிப்பை விட இந்திய ரூபாயின் மதிப்பு நிலையாகவே உள்ளது. தேவையான உதவிகளை ரிசர்வ் வங்கி செய்து உரிய நடவடிக்கை எடுப்போம் என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|