பதிவு செய்த நாள்
26 ஜூன்2016
01:31
புதுடில்லி:இந்திய தொழில் கூட்டமைப்பும், ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனமும் இணைந்து, உணவு பாதுகாப்பு அணுகுமுறையை ஊக்குவிக்கும் முயற்சிகளில் இறங்கி உள்ளன.இந்தியாவில், உணவு பாதுகாப்பு குறித்த விஞ்ஞானபூர்வமான பார்வை மிகவும் குறைவாக இருக்கிறது. இதை அதிகரிக்கும் விதமாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்புடன் இந்திய தொழில் கூட்டமைப்பும், ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனமும் கைகோர்த்துள்ளன.
இதுகுறித்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பின் முதன்மை செயல் அதிகாரி பவன் அகர்வால் கூறியதாவது:தகவல் மற்றும் தரவுகள் அடிப்படையில் உணவு பாதுகாப்புக்கான முயற்சிகள் எடுக்கபட இருக்கின்றன. மேலும், அரசு மற்றும் தொழிற்துறைக்கு இடையேயான உறவை பலப்படுத்தும் விதமாகவும் இந்த முயற்சி இருக்கும். இதில் விஞ்ஞானிகள், கல்வித்துறையினர் பங்களிப்பும் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|