பதிவு செய்த நாள்
26 ஜூன்2016
01:36
புதுடில்லி:பிரீத்தி நிறுவனம், மின்சாரத்தில் இயங்க கூடிய குக்கர் உள்ளிட்ட சாதனங்களை தயாரிக்க, முக்கியத்துவம் அளிப்பது என முடிவு செய்துள்ளது. சென்னையை சேர்ந்த பிரீத்தி கிச்சன் அப்ளையன்ஸ், சமையல் சாதனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, சமையல் காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதேசமயம், தேவையான அளவுக்கு மின் வினியோகம் உள்ளது. இதனால் மின் சாதனங்களை அதிக அளவுக்கு நுகர்வோர் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர். இதையடுத்து, இந்நிறுவனம், இண்டக் ஷன் குக்கர், கிரைண்டர்கள் தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க உள்ளது.தென் மாநிலங்களில் மட்டுமில்லாது, அடுத்தகட்டமாக மத்திய மற்றும் கிழக்கு மாநிலங்களிலும், குறிப்பாக மஹாராஷ்டிரா, குஜராத், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கும், இந்நிறுவனம் விற்பனையை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|