பதிவு செய்த நாள்
26 ஜூன்2016
01:50
பீஜிங்:உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக, சீனா விளங்குகிறது.இருந்தபோதிலும், கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் பொருளாதார வளர்ச்சி மந்தநிலையில் உள்ளது. உள்நாட்டு உற்பத்தி சரிவடைந்துள்ளது; கடன் அதிகரித்துள்ளது; பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதையடுத்து, உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து, ஏற்றுமதியை உயர்த்தும் நோக்கில், சீனாவின், ‘யுவான்’ கரன்சி மதிப்பு, இருமுறை குறைக்கப்பட்டது. மேலும், முதலீடுகளை ஊக்குவிக்க, சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற, வங்கிகளின் வாராக்கடன் அளவை குறைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன்படி, வங்கிகளின் வாராக்கடனில், வசூலிக்க முடியாத பிரிவில், 30 ஆயிரம் கோடி டாலருக்கும் அதிகமான தொகை சேர்க்கப்பட்டு, கணக்கு முடிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என, சீன அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|