பெட்ரோ கெமிக்கல் மண்­டலம்மத்­திய அமைச்சர் அறி­விப்புபெட்ரோ கெமிக்கல் மண்­டலம்மத்­திய அமைச்சர் அறி­விப்பு ... ரூபாயின் மதிப்பு உயர்வு – ரூ.67.84 ரூபாயின் மதிப்பு உயர்வு – ரூ.67.84 ...
இந்­தி­யாவில் 100 கோடி டாலர் மதிப்­புள்ளபிராண்­டாக ‘மாசா’ குளிர்­பானம் மாறும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2016
01:57

சித்துார்:‘‘ஆந்­தி­ராவில் செயல்ப­டுத்­தப்­படும், ‘உன்­னாட்டி’ பண்ணை திட்டம் மூலம், ‘மாசா’ குளிர்­பான பிராண்டு மதிப்பு, வரும், 2023 – 24ல், 100 கோடி டாலர் மதிப்­புள்­ள­தாக மாறும்,’’ என, கோக­கோலா இந்­தியா நிறு­வ­னத்தின், தென்­மேற்கு ஆசிய பிரிவு தலைவர் வெங்­கடேஷ் கின்னி தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் கூறி­ய­தா­வது:ஜெயின் இரி­கேஷன் சிஸ்டம்ஸ் நிறு­வ­னத்­துடன் இணைந்து, ஆந்­தி­ராவில், ‘யு.எச்.டி.பி.,’ என்ற நவீன வேளாண் சாகு­படி திட்டம் செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது. விவ­சா­யி­களின் ஒத்­து­ழைப்­புடன் செயல்­ப­டுத்­தப்­பட்டு வரும் இத்­திட்­டத்தின் கீழ், ‘தோதா­புரி, அல்­போன்சா’ மாம்­பழ வகைகள் விளை­விக்­கப்­ப­டு­கின்­றன. இதில், குறைந்த பரப்பில் அதிக விளைச்சல் தரும் நவீன தொழில்­நுட்பம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. மாம்பழத்தின் பங்குஇதன் மூலம், அடுத்த ஏழு ஆண்­டு­களில், 240 கிலோ டன் பழங்கள் கிடைக்கும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதில், மாசா குளிர்­பானம் தயா­ரிப்­ப­தற்­கான மாம்­ப­ழங்கள் பெரும்­பங்கு வகிக்கும். அத்­துடன், ‘மினிட் மெய்டு’ குளிர்­பானம் தயா­ரிக்க உதவும், ஆரஞ்சு பழங்­களும், குறிப்­பி­டத்­தக்க பங்­க­ளிப்பை வழங்கும்.
மாசா குளிர்­பானம், 100 கோடி டாலர் மதிப்­பு­டைய பிராண்­டாக வளர்ச்சி காண்­ப­தற்கு, 1,100 கோடி ரூபாய் மதிப்­புள்ள, 2 லட்சம் டன் மாங்கூழ் தேவைப்­படும். இரண்டு லட்சம் டன் மாம்­ப­ழங்­களை உற்­பத்தி செய்­வதன் மூலம், அதற்கு தேவை­யான மாங்கூழ் பெற முடியும். தற்­போது, மாசா குளிர்­பானம் தயா­ரிக்க, 650 கோடி ரூபாய் மதிப்­புள்ள, 1 லட்சம் டன் மாங்கூழ் கொள்­முதல் செய்­யப்ப­டு­கி­றது. இதில், 25 ஆயிரம் டன் மாங்கூழ், 20க்கும் மேற்­பட்ட நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கி­றது.
தமிழகத்தில்...இந்­தி­யாவில், கடந்த, 40 ஆண்­டு ­க­ளுக்கும் மேலாக, மாம்­பழ குளிர்­பான சந்­தையில், 50 சத­வீத சந்தைப் பங்­க­ளிப்­புடன், மாசா தனிச்சிறப்­புடன் கோலோச்சி வரு­கி­றது. இந்­தி­யாவில், கோக­கோலா நிறு­வனம், கடந்த, 2012 முதல், 500 கோடி டாலர் முத­லீட்டு திட்­டத்தை செயல்­ப­டுத்தி வரு­கி­றது. வரும், 2020க்குள் முடிக்­கப்­பட உள்ள, இந்த முத­லீட்டு திட்­டத்தில், மாசா பிராண்டு விரி­வாக்க நட­வ­டிக்­கை­களும் அடங்கும். அடுத்த இரண்டு ஆண்­டு­களில், ஐந்து புதிய திட்­டங்­களை செயல்­ப­டுத்த, நிறு­வனம் திட்­ட­மிட்­டுள்­ளது. அவற்றில் ஒன்­றாக, ஆந்­திரா மற்றும் தமி­ழ­கத்தில் இரண்டு மாங்கூழ் உற்­பத்தி ஆலைகள் அமைக்­கப்­படும். இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)