பதிவு செய்த நாள்
28 ஜூன்2016
07:13
புதுடில்லி : ‘நடப்பு, 2016 – 17ம் நிதியாண்டில், வாகன துறையின் வளர்ச்சி, ஏற்ற இறக்கமின்றி நிலையாக இருக்கும்’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘பிட்ச்’ தெரிவித்துள்ளது.
அதன் விவரம்:இந்தாண்டு பருவ மழை, வழக்கத்தை விட நன்கு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் துறைகளில், போட்டியால், புதிய ‘மாடல்’கள் அதிகம் அறிமுகமாகி வருகின்றன. ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலானால், அரசு ஊழியர்களின் ஊதியம், 23.5 சதவீதம் உயரும். இதனால், பணப்புழக்கம் பெருகி, வாகனங்கள் விற்பனை உயர துணைபுரியும்.பழைய வாகனங்களை விற்று, புதியவற்றை வாங்கும் போக்கு அதிகம் காணப்படும். வர்த்தக வாகனங்களுக்கான தேவையும் பெருகும்.
புதிய மாடல்கள் அறிமுகம், எரிபொருள் செலவினம் குறைந்திருப்பது ஆகியவை, வாகனங்களை வாங்கத் துாண்டும் முக்கிய அம்சங்களாக உள்ளன. அதனால், நடப்பு நிதியாண்டில், வாகன துறையின் வளர்ச்சி நிலையாக இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்திய வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பான – சியாம், நடப்பு நிதியாண்டில், பயணிகள் வாகன விற்பனை வளர்ச்சி, 8லிருந்து, 6 சதவீதமாக குறையும் என, மறுமதிப்பீடு செய்துள்ளது.வரி உயர்வு, டில்லி, கேரளாவில் டீசல் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் போன்றவற்றால், வளர்ச்சி குறையும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஒட்டுமொத்த வாகன விற்பனை வளர்ச்சியை, 12லிருந்து, 11 சதவீதமாக, ‘சியாம்’ குறைத்துள்ளது.
கடந்த நிதியாண்டில், முந்தைய ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, கார் விற்பனை, 7.2 சதவீதம் உயர்ந்து, 28 லட்சமாக அதிகரித்துள்ளது. சியாம் ஏற்கனவே மதிப்பிட்டபடி, வாகன தயாரிப்பு நிறுவனங்களின் விற்றுமுதல், 6.01 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|