பதிவு செய்த நாள்
29 ஜூன்2016
07:34
புதுடில்லி : ‘சீன அரசின் நடவடிக்கையால், பருத்தி மற்றும் பருத்தி நுாலிழை ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனங்கள், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ தெரிவித்துள்ளது.
சீன அரசு, பொருளாதார மந்தநிலையை சமாளிக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றுள் ஒன்றாக, பருத்தி மற்றும் பருத்தி நுாலிழை இறக்குமதியை குறைத்து, உள்நாட்டு நிறுவனங்களின் நுாலிழை உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக, சீன அரசு, கையிருப்பில்உள்ள பருத்தியை ஏலம் மூலம் விற்பனை செய்யத் துவங்கியுள்ளது. அவற்றை, சீன நுாற்பாலைகள் வாங்கி, நுாலிழைகளை தயாரித்து வருகின்றன.
இதனால், சீனாவுக்கான, இந்தியாவின் பருத்தி மற்றும் பருத்தி நுாலிழை ஏற்றுமதி, வரும் மாதங்களில் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, உள்நாட்டில் பருத்தி நுாலிழைக்கான தேவை அதிகரிக்காத சூழல் உள்ளது. இந்நிலையில், சீன நுாற்பாலைகள், அவற்றின் நுாலிழை உற்பத்தியை அதிகரிக்கும் என்பதால், அந்நாட்டிற்கான இந்திய நுாலிழை ஏற்றுமதி குறையும். இவற்றை கருத்தில் கொண்டு, இந்திய நுாற்பாலைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என, இக்ரா தெரிவித்துள்ளது.
உள்நாட்டில் நுாலிழை தேவை குறைவு, ஏற்றுமதியில் மந்தநிலை ஆகியவை காரணமாக, 2015 – 16ம் நிதியாண்டில், முந்தைய நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்தியாவின் நுாலிழை உற்பத்தி, மிகவும் குறைவாக, 3.2 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|