பதிவு செய்த நாள்
03 ஜூலை2016
00:24
மும்பை:அதானி நிறுவனம், குஜராத் மாநிலத்தில், 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான, தாமிர உருக்காலை ஒன்றை அமைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.
அண்மையில், அதானி நிறுவனம், ஆண்டு ஒன்றுக்கு ஒரு மில்லியன் டன் தாமிரத்தை, உருக்குவதற்கான ஆலையை, குஜராத் மாநிலத்தில் அமைக்க, சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கேட்டு விண்ணப்பத்திருந்தது. கடந்த மாத இறுதியில், இதுகுறித்து சுற்றுச்சூழல் துறையும் பரிசீலித்துள்ளது.
அந்த விண்ணப்பத்தில் உருக்காலை அமைப்பதற்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும் எனவும், உருக்குவதற்கான மூலப் பொருளான தாமிரத்தை இறக்குமதி செய்யவிருப்பதாகவும் அதானி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறும் போது, அதானி நிறுவனம் விரைவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் துறையில் இறங்க இருக்கிறது. அதற்கு தேவைப்படும் தாமிரத்தை தயாரிப்பதற்காகத் தான், இந்த உருக்காலையை அமைக்க இருக்கிறது. இந்த உருக்கு ஆலை இன்னும் இரண்டு ஆண்டுகளில் அமைக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|