பதிவு செய்த நாள்
27 ஜூலை2016
01:19
புதுடில்லி : டில்லியில், நிகழ்ச்சி ஒன்றில், அமெரிக்க வர்த்தக துறையின் துணை பிரதிநிதி ராபர்ட் ஹோலிமென் பேசியதாவது: உலகளவில், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப சாதனங்களுக்கு, இரண்டு லட்சம் கோடி டாலர் அளவிற்கு, சந்தை வாய்ப்பு உள்ளது. இது, இந்தியாவில், 6,500 கோடி டாலர் என்ற அளவிற்கு மிகக் குறைவாக உள்ளது. இந்தியா, தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப சாதனங்களுக்கு சர்வதேச சந்தையில் உள்ள வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு, இவ்வகை சாதனங்களுக்கான சுங்க வரிகளை நீக்க வேண்டும். இதனால், சரக்கு போக்குவரத்து துறையில், இவ்வகை சாதனங்களை சுலபமாக அறிமுகப்படுத்த முடியும். அமெரிக்கா – இந்தியா இடையிலான பரஸ்பர வர்த்தகமும் அதிகரிக்கும். உலக வர்த்தக அமைப்பின், வர்த்தக உதவி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து, இந்தியாவுடன் பேச்சு நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக, அடுத்த மாதம், அமெரிக்க வர்த்தக குழு, டில்லி வர உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|