பதிவு செய்த நாள்
27 ஜூலை2016
01:21
புதுடில்லி : மாருதி சுசூகி நிறுவனம், நீர் வழித்தடம் வாயிலாக, கார்களை அனுப்ப முடிவு செய்து உள்ளது.
மத்திய அரசு, சாலைகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்கவும், நீர் வழித்தட போக்குவரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்து உள்ளது. இதற்காக, சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், மாருதி சுசூகி இந்தியா, நீர் வழித்தடம் மூலமாக, வாகனங்களை அனுப்ப, மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்து உள்ளது.
இதுகுறித்து, மத்திய கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ராஜ்யசபாவில் கூறுகையில், ‘‘நீர் வழித்தடம் வாயிலாக, வாகனங்களை அனுப்ப, மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் மற்றும் உள்நாட்டு நீர் வழித்தட ஆணையம் இடையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது,’’ என்றார்.
ரயில் மூலம் சரக்குகளை அனுப்ப, ஒரு கி.மீட்டருக்கு ஒரு ரூபாய்; சாலை வழியாக, 1.50 ரூபாய் என செலவாகிறது. நீர் வழித்தடத்தில், 50 பைசா மட்டும் செலவு ஆகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|