பதிவு செய்த நாள்
27 ஜூலை2016
01:27
புதுடில்லி : இந்திய ஐ.டி., துறையில், டி.சி.எஸ்., நிறுவனத்தில், அதிக ஊழியர்கள் பணிபுரிவதாக, ‘நாஸ்காம்’ தெரிவித்து உள்ளது.
இந்தியாவில், தகவல் தொழில்நுட்ப துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களில், 2016 ஜூன் மாத நிலவரப்படி, அதிக ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனமாக, டி.சி.எஸ்., இருப்பதாக, நாஸ்காம் அமைப்பு தெரிவித்து உள்ளது. இதைத் தொடர்ந்து, இன்போசிஸ் நிறுவனத்தில், 1.97 லட்சம் பேர்; விப்ரோவில், 1.73 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.
முதல், 10 இடங்களில், எச்.சி.எல்., டெக்னாலஜிஸ், டெக் மகிந்திரா, ஜென்பேக்ட் உள்ளிட்டவை இடம்பெற்று உள்ளன. இந்தியாவில் உள்ள ஐ.டி., நிறுவனங்களில் மொத்தம், 37 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். கடந்த, 2015 – 16ம் ஆண்டில், கூடுதலாக, இரண்டு லட்சம் பேர் வேலைக்கு சேர்ந்து உள்ளனர். 10 லட்சத்து 30 ஆயிரம் பெண்கள் இத்துறையில் பணியாற்றுகின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|