‘ஜபாங்’ வலை­தள நிறு­வ­னத்தை ‘மைந்த்ரா’ வளைத்து போட்­டது‘ஜபாங்’ வலை­தள நிறு­வ­னத்தை ‘மைந்த்ரா’ வளைத்து போட்­டது ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.22 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.22 ...
வரும் 2020ம் ஆண்டில்.. வேளாண் ரசாயன பொருட்கள் சந்தை 630 கோடி டாலராக வளர்ச்சி காணும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2016
01:29

புதுடில்லி : ‘இந்திய வேளாண் ரசாயனப் பொருட்கள் சந்தை மதிப்பு, வரும், 2020ல், 630 கோடி டாலராக உயரும்’ என, டி.எஸ்.எம்.ஜி., மற்றும் ‘பிக்கி’ அமைப்பு ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதன் விபரம்: நாட்டில், மக்கள் தொகை பெருக்­கத்­திற்கு நிக­ராக, உணவுப் பொருட்­க­ளுக்­கான தேவையும் உயர்ந்து வரு­கி­றது. தற்­போது, ஆண்­டுக்கு, 25.30 கோடி டன் உணவு தானி­யங்கள் உற்­பத்தி செய்­யப்­ப­டு­கின்­றன. வரும், 2030ல், உணவு தானி­யங்­களின் தேவை, 35.50 கோடி டன்­னாக உயரும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதற்­கேற்ப, உணவு தானி­யங்கள் உற்­பத்தி அதி­க­ரிக்க வேண்டும். ஆனால், துர­திர்ஷ்­ட­வ­ச­மாக, நாட்டில், விவ­சாயம் செய்­வ­தற்கு தகு­தி­யான விளை­நிலம் குறைந்­துள்­ளது; அவற்­றிலும், பயி­ரிடும் பரப்­ப­ளவு குறைந்து வரு­கி­றது.
காலா­வ­தி­யாகும் காப்­பு­ரி­மைகள்:அதே­ச­மயம், வேளாண் பயிர்­களில் பூச்சி தாக்­குதல் பெருகி வரு­கி­றது. இதனால், வேளாண் உற்­பத்தி பாதிக்­கப்­பட்டு, உள்­நாட்டு தேவையை பூர்த்தி செய்ய முடி­யாத சூழ­லுக்கு வித்­திட்­டுள்­ளது. இப்­பி­ரச்­னையால், வேளாண் பயிர்­களைக் காக்கும் ரசா­யனப் பொருட்­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்­துள்­ளது. வளர்ந்த நாடு­க­ளுடன் ஒப்­பிடும் போது, இந்­தி­யாவில், வேளாண் பயிர் பாது­காப்­புக்­காக ரசா­யனப் பொருட்கள் பயன்­ப­டுத்­து­வது, மிகக் குறை­வா­கவே உள்­ளது.
உல­க­ளவில், ஒரு ஹெக்­டே­ருக்கு, சரா­ச­ரி­யாக, 3 கிலோ பயிர் பாது­காப்பு பொருட்கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. இது, இந்­தி­யாவில், 0.6 கிலோ என்ற அளவில் குறை­வாக உள்­ளது. அதனால், இந்­தி­யாவில், வேளாண் ரசா­ய­னங்கள் துறைக்கு, மிகச் சிறப்­பான எதிர்­காலம் உள்­ளது. நாட்டில், பயன்­ப­டுத்­தப்­படும் பயிர் பாது­காப்பு பொருட்­களில், பூச்சிக் கொல்லி மருந்­துகள், 60 சத­வீத பங்­க­ளிப்பை கொண்­டுள்­ளன. அடுத்து, காளான் கொல்லி மருந்­துகள், 18 சத­வீதம்; களைக்­கொல்லி மருந்­துகள், 16 சத­வீதம் என்ற அளவில் உள்­ளன. வரும் ஆண்­டு­களில், இவற்றின் பங்­க­ளிப்பு அதி­க­ரிக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
உல­க­ளவில், பல வேளாண் ரசா­யனப் பொருட்­களின் காப்­பு­ரி­மைகள் காலா­வ­தி­யாகி வரு­கின்­றன. அவற்றை, இந்­தியநிறு­வ­னங்கள், குறைந்த செலவில் உற்­பத்தி செய்யும். வேளாண் ரசா­யனப் பொருட்­களின் தேவை உயர்ந்து வரு­வதால், அவற்­றுக்­கான ஆய்வு நட­வ­டிக்­கை­களும் அதி­க­ரிக்கும்.கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக, வறட்சி, சர்­வ­தேச பொரு­ளா­தார மந்­த­நிலை ஆகிய கார­ணங்­களால், இந்­திய பயிர் பாது­காப்பு துறையின் வளர்ச்சி, சுணக்­க­மாக இருந்­தது. அதனால், 2014 – 15ம் நிதி­யாண்டில், இந்­திய வேளாண் ரசா­ய­னங்கள் துறையின் சந்தை மதிப்பு, 440 கோடி டால­ராக இருந்­தது.
பருவமழை :இந்­தாண்டு, பருவ மழை பொழிவால், இத்­து­றையின் வளர்ச்சி நன்கு இருக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. வேளாண் ரசா­யனப் பொருட்­களின் தேவை, ஆண்­டுக்கு, 6.5 சத­வீதம்; ஏற்­று­மதி, 9 சத­வீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வரு­கி­றது. அதன் அடிப்­ப­டையில், வரும், 2020ல், வேளாண் ரசா­யன பொருட்கள் சந்தை மதிப்பு, 630 கோடி டால­ராக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)