பதிவு செய்த நாள்
28 ஜூலை2016
05:17
புதுடில்லி : மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர் மன்சுக் எல்.மாண்டவியா, லோக்சபாவில் கூறியதாவது: கடந்த, 2015 – 16ம் நிதியாண்டில், இந்திய மருந்து துறையில், 4,975 கோடி ரூபாய் அளவிற்கு, அன்னிய நேரடி முதலீடு குவிந்தது. இது, இதற்கு முந்தைய, 2014 – 15ம் நிதியாண்டில், 9,052 கோடி ரூபாயாக உயர்ந்திருந்தது. மத்திய அரசு, அன்னிய நேரடி முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த, ஜூன், 20ம் தேதி, மருந்து, உள்நாட்டு விமான சேவை, ‘சிங்கிள் பிராண்டு’ சில்லரை விற்பனை, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில், அன்னிய நேரடி முதலீட்டிற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. மருந்து துறையில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு, அனுமதிக்கப்பட்டுள்ளது. அன்னிய நிறுவனங்கள், 74 சதவீத முதலீடுகளை, மத்திய அரசின் அனுமதியின்றி மேற்கொள்ளலாம். அதற்கு மேற்பட்ட முதலீடுகளுக்கு, மத்திய அரசின் ஒப்புதல் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|