பதிவு செய்த நாள்
28 ஜூலை2016
05:21
புதுடில்லி : ‘‘ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி காண, அத்துறை குறித்த வங்கிகளின் கண்ணோட்டம் மாற வேண்டும்,’’ என, தேசிய ரியல் எஸ்டேட் வளர்ச்சி குழு தலைவரும், டி.எல்.எப்., நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான, ராஜீவ் தல்வார் தெரிவித்தார்.
தாராள மனப்பான்மைஅவர் மேலும் கூறியதாவது: ரியல் எஸ்டேட் துறை, பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. இத்துறை, அதிக இடர்ப்பாடுகளை சந்திக்க கூடியது என, ரிசர்வ் வங்கி வரையறுத்து உள்ளது. அதனால், ரியல் எஸ்டேட் துறைக்கு கடன் வழங்க, வங்கிகள் தயங்குகின்றன. இந்த நிலை மாற வேண்டும். ரியல் எஸ்டேட் துறை குறித்த நிலைப்பாட்டை வங்கிகள் மாற்றிக் கொண்டு, மேலும் தாராள மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். நகரங்களில் மக்கள் தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப, தரை பரப்பளவு விகிதம் மாற்றப்பட வேண்டும். இந்தியாவை விட, சர்வதேச நகரங்கள் பலவற்றில், தரை பரப்பளவு விகிதம் அதிகமாக உள்ளது.
திட்டமிட்டபடி காரியங்கள் நடைபெறாதபட்சத்தில், வீடுகளை, உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எந்த பில்டரும், கட்டி முடித்த வீடுகளை தாமதமாக ஒப்படைக்க விரும்புவதில்லை. கட்டுமான வர்த்தகம், நம்பிக்கைக்குரியது. அசையா சொத்து என்பதால், ஆபத்தற்றது.
பாரம்பரிய வர்த்தகம்தற்போது, வலைதளம் வாயிலாக நடைபெறும் வியாபாரத்தால், பாரம்பரிய வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதுபோன்ற நிலை, ரியல் எஸ்டேட் துறைக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|