பதிவு செய்த நாள்
28 ஜூலை2016
10:40
மும்பை : வாடிக்கையாளர்களின் விபர சேகரிப்பு விதிகளை மீறியதாக 13 பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ரூ.27 கோடி அபராதம் விதித்துள்ளது.
பேங்க் ஆப் பரோடோவுக்கு ரூ.5 கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் சின்டிகேட் வங்கிக்கு தலா ரூ.3 கோடியும், யுசிஓ வங்கி, ஹச்டிஎப்சி வங்கி, அலகாபாத் வங்கி, கனரா வங்கி மற்றும் இண்டஸ்இன்ட் வங்கி ஆகியவைகளுக்கு தலா ரூ.2 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதே சமயம் அபராதம் விதிக்கப்பட்டுள்ள வங்கிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, கோடாக் மகேந்திரா வங்கி, யூனியன் வங்கி உள்ளிட்ட வங்கிகளுக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை கழகம் தெரிவிக்கவில்லை.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|