பதிவு செய்த நாள்
29 ஜூலை2016
10:14
மும்பை : ஜூலை மாதத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (ஜூலை 29) இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) செனசெக்ஸ் 10.22 புள்ளிகள் சரிந்து 28,198.40 புள்ளிகளாகவும், நிப்டி 2.75 புள்ளிகள் சரிந்து 8663.55 புள்ளிகளாகவும் உள்ளன.
முக்கிய பெரு நிறுவனங்களின் பங்கு மதிப்பு குறைந்ததாலும், ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவின் காரணமாகவும் இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஜப்பான் வங்கிகள் வெளியிட்டுள்ள பணக்கொள்கை முடிவால் அந்நாட்டு பங்குச்சந்தை சரிந்ததன் எதிரொலியாக ஆசிய பங்குச்சந்தைகள் சரிவுடன் காணப்படுகின்றன. இந்திய பங்குச்சந்தைகளின் சரிவிற்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
போர்ட், ஆப்பிள் போன்ற நிறுவனங்களில் எதிர்பார்த்த அளவிற்கு முதலீடுகள் இல்லாததால் அமெரிக்க பங்குச்சந்தைகளும் சரிவுடனேயே நிறைவடைந்துள்ளன. சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவுடனேயே காணப்படுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|