பதிவு செய்த நாள்
29 ஆக2016
06:53
பெங்களூரு : ஹூவேய் நிறுவனம், இந்தியாவில் மிகப்பெரிய சேவை மையத்தை துவக்கி இருக்கிறது.
சீனாவை சேர்ந்த தொலைதொடர்பு துறை நிறுவனமான ஹூவேய், இந்தியாவில் மிகப் பெரிய உலகளாவிய சேவை மையத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவை மையத்துக்காக முதற்கட்டமாக 136 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது, ஹூவேய் நிறுவனம்.இந்த மையமானது சீனா, ருமேனியா, மெக்ஸிகோ ஆகியநாடுகளில் இருக்கும் இந்நிறுவனத்தின் பிற மூன்று சேவை மையங்களை விட அதிகளவிலான திட்டங்களை கையாளும் திறன் படைத்ததாக இருக்கும் என ஹூவேய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, இந்நிறுவனத்தின் இந்திய பிரிவின் தலைமை செயல் அதிகாரியான ஜெய் சென் கூறியதாவது: இந்தியாவில் அமைக்கப்பட்டிருக்கும் சேவைமையம் 50 திட்டங்களையும் 30 நாடுகளுக்கு தேவையான ஆதரவையும் அளிக்க வல்லது. இதன் மூலம் 35 கோடி சந்தாதாரர்கள் பயனடைவார்கள். இந்த மையத்தில், 1,000 பொறியாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|