பதிவு செய்த நாள்
31 ஆக2016
23:52
புதுடில்லி : ‘‘நடப்பாண்டில், இந்தியாவில், மொபைல் போன் உற்பத்தி மதிப்பு, 94 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும்,’’ என, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: இந்தியாவில், மொபைல் போன் உற்பத்தி மதிப்பு, 2014 – 15ம் ஆண்டில், 19 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இது, 2015 – 16ம் ஆண்டில், 54 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நடப்பாண்டில், 74 சதவீதம் அதிகரித்து, 94 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அளவின் அடிப்படையில், 2014 – 15ல், ஆறு கோடி மொபைல் போன்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இது, 2015 – 16ம் ஆண்டில், 83 சதவீதம் உயர்ந்து, 11 கோடியாக அதிகரித்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, மின்சாதன பொருட்கள் உற்பத்தியில், 1.23 லட்சம் கோடி ரூபாய்க்கு, அன்னிய நேரடி முதலீடு ஈர்க்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|