பதிவு செய்த நாள்
31 ஆக2016
23:55
சென்னை : டி.வி.எஸ்., ஸ்ரீசக்ரா நிறுவனம், சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது.
டி.வி.எஸ்., ஸ்ரீசக்ரா நிறுவனம், தமிழகத்தில் உள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் வசிக்கும் வேலையில்லாத பொறியியல் பட்டதாரிகளுக்கு, சிறப்பு பயிற்சி வகுப்புகள் மூலமாக, வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக, சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.ஆறு மாத காலம் நடத்தப்படும் இந்த வகுப்புகளால் மேலாண்மை, மென்பொருள் மற்றும் தகவல் பரிமாற்றம் சார்ந்த தொழில்திறன்களை மாணவர்கள் அதிகரித்து கொள்ளலாம்.
இதுகுறித்து, டி.வி.எஸ்., ஸ்ரீசக்ரா நிறுவனத்தின் இயக்குனர் பி.விஜயராகவன் கூறியதாவது: விஜயதசமி தினத்தன்று வகுப்புகள் துவங்குகின்றன. தங்களின் தனிப்பட்ட திறனை அதிகரித்துக் கொள்வதோடு, சேரும் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் உதவும் வகையில் தேவைப்படும் பயிற்சியை மாணவர்களுக்கு அளிப்பதே எங்களின் நோக்கமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|