பதிவு செய்த நாள்
05 செப்2016
05:01
புதுடில்லி;ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் துறையில், தரச் சான்று பெறுவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படும் புகாரை, இந்திய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வளர்ச்சி அமைப்பான - ஐ.எஸ்.டி.ஏ.ஏ., மறுத்துள்ளது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருட்கள் தயாரிப்பு, இறக்குமதி, சேமிப்பு, விற்பனை, வினியோகம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் நிறுவனங்கள், இந்திய தர நிர்ணய கழகத்தின், தரக் கட்டுப்பாட்டு சான்று பெறுவது, கடந்த ஜூன், 10ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. எனினும், இந்த சான்று பெற, மேலும் மூன்று மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தங்களை கலந்தாலோசிக்காமல், தரச் சான்று நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக, உலோகம் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வியாபாரிகள் சங்கம், இந்திய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தொழில் கூட்டமைப்பு மற்றும் பி.பி.எம்.ஏ.ஐ., ஆகியவை புகார் தெரிவித்துள்ளன. இந்த சான்று பெறுவதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளன.
இந்த குற்றச்சாட்டுகளை ஐ.எஸ்.டி.ஏ.ஏ., மறுத்துள்ளது. கடந்த ஓராண்டிற்கும் மேலாக, தரச் சான்று நடைமுறைகள் குறித்து, கருத்துரு கோரப்பட்டது. சான்று பெறும் விதிமுறைகளை எளிமையாக்கி, ஒரு மாதத்தில் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், ஒரு சில அமைப்புகள் உண்மைக்கு மாறான கருத்துக்களை வெளியிட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என, ஐ.எஸ்.டி.ஏ.ஏ., தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|