பதிவு செய்த நாள்
25 செப்2016
00:39
கோல்கட்டா:பானாசோனிக் நிறுவனம், மொபைல் போன் விற்பனையின் மூலம், 2,500 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்டமிட்டு உள்ளது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, பானாசோனிக் நிறுவனம், ‘டிவி, ரேடியோ, மொபைல் போன்’ உள்ளிட்ட, நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்பு, விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, இந்நிறுவனத்தின் மொத்த விற்றுமுதலில், மொபைல் போன்களின் பங்களிப்பு, 25 சதவீதம் என்றளவில் உள்ளது; இதை, மூன்று மடங்காக அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, பானாசோனிக் இந்தியா நிறுவன தலைவர், மனிஷ் சர்மா கூறியதாவது:வாடிக்கையாளர் விரும்பும் வகையில், புதிய மொபைல் போன்களை அறிமுகம் செய்ய, பானாசோனிக் முடிவு செய்துள்ளது. அதன்படி, 7,000 ரூபாய் முதல், 16 ஆயிரம் ரூபாய் விலையுடைய, ஆறு மாடல்களில், புதிய மொபைல் போன்கள், நவ., மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்படும். எங்கள் நிறுவனத்தின் மொத்த வருவாயில், மொபைல் போன் மூலம், 2,500 கோடி ரூபாய் ஈட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|