பதிவு செய்த நாள்
25 செப்2016
00:49
புதுடில்லி;‘சர்வதேச சந்தையில் நிலவும் போட்டியை, இந்திய நிறுவனங்கள் சமாளிக்க முடியாமல் உள்ளதற்கு, உள்நாட்டில் போக்குவரத்து செலவு அதிகமாக உள்ளதும் ஒரு காரணம்; அதை குறைப்பது தொடர்பாக, ரயில்வே மற்றும் துறைமுக துறைகளுடன், மத்திய வர்த்தக அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது’ என, வர்த்தக அமைச்சக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர், மேலும் கூறியதாவது:ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான போக்குவரத்து செலவு, இந்தியாவில் அதிகமாக உள்ளது. அதனால், இந்திய பொருட்கள், சர்வதேச சந்தையில், போட்டி நாடுகளின் சவாலை எதிர்கொள்வது, கடினமாக உள்ளது.
ஏற்றுமதி வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. அதனால், இந்திய ரயில்வே, ஏற்றுமதி பொருட்களுக்கான, சரக்கு போக்குவரத்து கட்டணங்களை குறைக்க வேண்டும். அத்துடன், சரக்கு ரயில் போக்குவரத்து நேரத்தையும் குறைக்க வேண்டும். உதாரணமாக, டில்லியின் துக்ளகாபாத்தில் இருந்து, மும்பை, ஜவஹர்லால் துறைமுகத்திற்கு, ரயில் மூலம் சரக்குகளை அனுப்ப, இரு நாட்கள் ஆகின்றன; இதை, 36 மணி நேரமாக குறைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரக்கு போக்குவரத்தில் ஏற்படும் தாமதம், பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கிறது. குறித்த காலத்தில் ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில், நிறுவனங்களின் நம்பகத்தன்மையும் பாதிக்கப்படுகிறது. அது போல, துறைமுகங்களில் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதியிலும் தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக, ரயில்வே மற்றும் துறைமுக உயரதிகாரிகளிடம், பேச்சு நடைபெற்று வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|