இந்­தி­யாவில் வலை­தளம் வாயிலான கல்வி சந்தை:ரூ.16,750 கோடி­யாக உயரும்இந்­தி­யாவில் வலை­தளம் வாயிலான கல்வி சந்தை:ரூ.16,750 கோடி­யாக உயரும் ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 66.75 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 66.75 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
சொந்த வீடு தேர்வு: நான்கு முக்கிய அம்சங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2016
23:42

சொந்த வீடு வாங்கும் போது பல்­வேறு அம்­சங்­களை கவ­னத்தில் கொள்ள வேண்டும். இவற்றில் நான்கு அம்­சங்கள் மிகவும் முக்­கி­ய­மா­னது என்­கின்­றனர் வல்­லு­னர்கள்.
அமை­விடம், பணத்­திற்­கான மதிப்பு, பில்­டரின் நம்­பிக்கை மற்றும் கட்­ட­டத்தின் தரம் ஆகிய இந்த அம்­சங்கள் வீட்டின் தரத்­தையும், அது அளிக்க கூடிய மதிப்­பையும் தீர்­மா­னிக்க கூடி­ய­வை­யாக அமை­கின்­றன. இவற்றில் சம­ரசம் செய்து கொள்­ளாமல் இருப்­பது நல்­லது.
அமை­விடம்புதி­தாக வாங்க இருக்கும் வீடு, சரி­யான இடத்தில் அமைந்­தி­ருக்க வேண்டும். குறை­வான விலையில் கிடைக்­கி­றது என்­ப­தற்­காக போது­மான வச­திகள் இல்­லாத இடத்தில் வீடு வாங்­கு­வதால் தொல்­லை­களே அதிகம் இருக்கும். அலு­வ­லகம் செல்லும் வசதி, பள்ளி, கல்­லுாரி ஆகி­வற்­றுக்­கான தொடர்பு வசதி ஆகி­ய­வற்றை கருத்தில் கொண்டு அமை­வி­டத்தை தேர்வு செய்ய வேண்டும். எல்லா வச­திகள் கொண்ட இடத்தில் விலை அதி­க­மாக இருக்கும் என்­றாலும், பட்­ஜெட்­டுக்குள் அடங்கும் விலையில் பொருந்­தக்­கூ­டிய வீடு பொருத்­த­மான இடத்தில் அமைந்­தி­ருப்­பதை உறுதி செய்­வது அவ­சியம். நல்ல அமை­விடம் வச­தி­களை கொண்­டி­ருப்­ப­தோடு, எதிர்­கா­லத்தில் வீட்டின் மதிப்பை உயர்த்தக் கூடி­ய­தா­கவும் இருக்கும்.
பணத்­திற்­கான மதிப்பு இப்­போ­தைய சந்தை, வாங்­கு­ப­வரின் சந்­தை­யாக இருப்­ப­தாக சொல்­லப்­ப­டு­கிறது. அதா­வது வாங்­கு­ப­வர்­களின் எண்­ணிக்­கையை விட கட்­டப்­படும் வீடு­களின் எண்­ணிக்கை அதி­க­மாக உள்­ளது. எனவே, பில்­டர்கள், பல்­வேறு சலு­கை­க­ளையும் அளித்து கவர முயலும் நிலை உள்­ளது. எனினும், கவர்ச்­சி­யான சலு­கையால் மட்டும் ஈர்க்­கப்­பட்டு விடக்­கூ­டாது. அதிக வசதி கொண்ட இடங்­க­ளிலும் கூட, பட்ஜெட்­டுக்கு ஏற்ற விலையில் வீடுகள் இருக்­கலாம். விலையை மட்டும் பார்க்­காமல், மற்ற அம்­சங்­க­ளையும் மனதில் கொண்டு தேடினால், பணத்­திற்கு முழு மதிப்பு அளிக்கும் நல்ல வீட்டை கண்டறியலாம்.
பில்டர் எப்­படி?பில்­டர்கள் மற்றும் கட்­டு­மான நிறுவனங்கள் வாடிக்­கை­யா­ளர்­களை கவர பல்­வேறு வாக்­கு­று­தி­களை அளித்­தாலும், உரிய காலத்தில் வீடு­களை கட்டி முடிக்­காமல் இழுத்­த­டிப்­பதும் பர­வ­லாக இருக்­கி­றது. எனவே, வீட்டை தேர்வு செய்யும் முன் அந்த திட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள பில்டர் அல்­லது நிறு­வ­னத்தின் நம்­ப­கத்­தன்­மையை உறுதி செய்து கொள்­வது நல்­லது.
கட்­ட­டத்தின் தரம்வீடு தர­மா­ன­தாக இருக்க வேண்டும் என்றால் குடி­யி­ருப்பு தர­மான முறையில் கட்­டப்­பட வேண்டும். தர­மற்ற முறையில் கட்­டப்­படும் கட்­ட­டங்­களால் ஏற்­படும் பாதிப்­புகள் நாம் அறி­யா­தது அல்ல. அது மட்டும் அல்ல, போதிய தரம் இல்லை என்றால், பின்னர் பரா­ம­ரிப்பு செலவும் அதிக­மாக இருக்கும். வடி­வ­மைப்­புக்கு ஏற்ப கட்­டப்­ப­டு­கி­றதா... தர­மான பொருட்கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றதா... போன்ற அம்­சங்­களில் கவனம் செலுத்த வேண்டும். கட்­டு­மா­னத்தின் தரத்தில் சம­ர­சமே செய்து கொள்­ளக்­கூ­டாது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)