பதிவு செய்த நாள்
26 செப்2016
12:26
புதுடில்லி:ரயில்வே ஊழியர்களுக்கு, இந்த ஆண்டும், 78 நாள் ஊதியம், 'போனசாக' வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ரயில்வே ஊழியர்களுக்கு, ஆண்டுதோறும், ஆயுத பூஜையை ஒட்டி, 'போனஸ்' வழங்கப்படுவது வழக்கம். 2011 முதல், ரயில்வே ஊழியர்களுக்கு, 78 நாள் ஊதியம், போனசாக வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான போனஸ் குறித்து, இந்திய ரயில்வே ஊழியர்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலர், ராகவய்யா கூறியதாவது:இந்த ஆண்டும், 78 நாள் ஊதியம் போனசாக வழங்கப்பட வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளோம். அதை ஏற்று, அடுத்த வாரத்தில், மத்திய அரசு அறிவிக்கும் என, எதிர்பார்க்கிறோம்.
போனசுக்கான உச்ச வரம்பு, 3,500 ரூபாயிலிருந்து, 7,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதால், 2015ல் பெற்றதை விட, இருமடங்கு அதிகமான தொகையை, ஊழியர்கள் பெறுவர். 2015ல் குறைந்தபட்ச போனசாக, 8,975 ரூபாய் வழஙகப்பட்டது. இந்த முறை, அவர்கள், 18 ஆயிரம் ரூபாய் வரை பெறுவர்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|