பதிவு செய்த நாள்
28 செப்2016
04:11
மும்பை : அனில் அம்பானி தலைமையிலான, ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம், நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளது.
இதுகுறித்து, மும்பையில் நடைபெற்ற, ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், அனில் அம்பானி பேசியதாவது: ரிலையன்ஸ் கேப்பிடல், 2017 ஏப்ரல் மாதம், வீட்டுவசதி கடன் பிரிவை தனியே பிரித்து, பங்குச்சந்தையில் பட்டியலிட திட்டமிட்டு உள்ளது. அதுபோல, கடன் வசதி, காப்பீடு ஆகிய பிரிவுகளும், உரிய நேரத்தில் பிரிக்கப்பட்டு, பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும்.
இது தவிர்த்து, நுகர்வோர் கடன் வர்த்தகத்திற்கு, தனி பிரிவு ஏற்படுத்தப்படும். இதன் மூலம், இப்பிரிவுகள் ஒரே இலக்கில் செயல்பட்டு, சிறப்பான வளர்ச்சியும், லாபமும் ஈட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன், ரிலையன்ஸ் கேப்பிடல், மீண்டும் விளைபொருள் முன்பேர சந்தையை துவக்க உள்ளது. இச்சந்தை, வைரம் மற்றும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை, முக்கிய இலக்காக கொண்டு செயல்படும். வைரத்தில் மட்டும், தினமும், 6,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான வர்த்தகத்தை, இச்சந்தை கையாளும்.
அனைத்து நடவடிக்கைகளும், பங்குதாரர்களின் ஒப்புதலுக்குப் பின்ே, மேற்கொள்ளப்படும். நிறுவனம், பங்குதாரர்களுக்கு ஆண்டுதோறும், ‘டிவிடெண்ட்’ வழங்குவதை உறுதியாக கடைபிடித்து வருகிறது. ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி, வர்த்தக நடைமுறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதில், நிதிச் சேவைகள் துறையும் சிறப்பாக பயன்பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
‛ரிலையன்ஸ் கேப்பிடல், மீண்டும் விளைபொருள் முன்பேர சந்தையை துவக்க உள்ளது. இச்சந்தை, வைரம் மற்றும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை, முக்கிய இலக்காக கொண்டு செயல்படும்’
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|