பதிவு செய்த நாள்
29 செப்2016
01:45
புதுடில்லி : டில்லியில், மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தலைமையில், பி.எஸ்.என்.எல்., உயரதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது.
அதில் அமைச்சர் பேசியதாவது: அக்கறையுடன் பணியாற்றும் ஊழியர்களுக்கு உரிய சன்மானம் அளிக்கப்பட வேண்டும். ஆனால், வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும், மாதத்தின் முதல் நாள், கறாராக சம்பளம் வாங்கி விடலாம் என்ற எண்ணம் பலருக்கு உள்ளது. இந்த மனோபாவத்தை ஊழியர்கள் கைவிட வேண்டும்.
பல நிறுவனங்களில், பணித்திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. இதை, பி.எஸ்.என்.எல்., தன் ஊழியர்களிடமும் நடைமுறைப்படுத்தலாம். இது குறித்து, தொலைத்தொடர்பு செயலரிடம் கூட நான் பேசியுள்ளேன். தொலைத்தொடர்பு சேவையில், பி.எஸ்.என்.எல்., தற்போதைய, 10.4 சதவீத பங்களிப்பை, 15 சதவீதமாக உயர்த்த வேண்டும். தொலைபேசி சேவையில், குறைகளுக்கு தீர்வு காணாமல், இணைப்பு ரத்து செய்யப்படுவது குறித்து, விசாரிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|