பதிவு செய்த நாள்
30 செப்2016
00:45
மும்பை;ஆதித்ய பிர்லா குழுமம், அடுத்த மூன்று ஆண்டுகளில், 12 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க முடிவு செய்துள்ளது. குமார் மங்களம் பிர்லாவை தலைவராக கொண்டுள்ள, ஆதித்ய பிர்லா குழுமம் துவக்க நிலை பணியாளர்கள் பிரிவில், 12 ஆயிரம் பேருக்கு, வேலை வழங்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, குமார் மங்களம் பிர்லா கூறியதாவது:எங்கள் குழும நிறுவனங்களில் தற்போது, 1.10 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அடுத்த மூன்று ஆண்டுகளில், துவக்க நிலை பிரிவில், 12 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதில், இன்ஜினியர், டிப்ளமோ பட்டதாரிகள், எம்.பி.ஏ., மற்றும் ஐ.டி.ஐ., பட்டதாரிகள் அடங்குவர்; அவர்கள், உற்பத்தி பிரிவுகளில் ஈடுபடுத்தப்படுவர். எங்கள் குழுமம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட, சேவை துறைகளில் களமிறங்கியதன் மூலம், பெண் ஊழியர்களின் எண்ணிக்கை, 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|