பதிவு செய்த நாள்
02 அக்2016
00:11
ஐதராபாத்:டி.ஆர்.எஸ்., என, சுருக்கமாக அழைக்கப்படும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி எம்.பி., கவிதா கூறியதாவது:இந்தியாவின் மஞ்சள் உற்பத்தியில், தெலுங்கானா மாநிலத்தின் பங்களிப்பு, 60 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இந்நிலையில், கம்போடியாவில் இருந்து, மலிவு விலையில், மஞ்சள் இறக்குமதியாகிறது.
இது, தற்போது சிறிய அளவிற்கு தான் உள்ளது என்ற போதிலும், மக்கள் அதிகளவில் அவற்றை வாங்கும் போது, உள்நாட்டு மஞ்சள் விவசாயிகள் பாதிக்கப்படுவர். கம்போடியாவில் இருந்து, மலிவு விலையில், ரப்பர் இறக்குமதி ஆனதால், கேரளாவில், ரப்பர் விவசாயிகள் பலர், தற்கொலை செய்து கொண்டனர். அது போன்ற நிலை, மஞ்சள் விவசாயிகளுக்கு ஏற்படக் கூடாது. அதனால், மத்திய அரசு, உடனடியாக, கம்போடியாவில் இருந்து இறக்குமதியாகும் மலிவு விலை மஞ்சளுக்கு, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார். இவர், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் ஆவார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|