பதிவு செய்த நாள்
02 அக்2016
00:26
புதுடில்லி:அவென்யூ சூப்பர் மார்ட் உள்ளிட்ட, நான்கு நிறுவனங்கள், பங்கு வெளியீட்டின் மூலம், நிதி திரட்ட முடிவு செய்துள்ளன. டி மார்டை சேர்ந்த, அவென்யூ சூப்பர் மார்ட், பல்பொருள் அங்காடிகளை நடத்தி வருகிறது. இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 1,870 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்கு திட்டமிட்டு உள்ளது.
இதேபோல், ஜெனிசிஸ் கலர்ஸ், 650 கோடி ரூபாய்; ஜி.ஆர்., இன்போ புராஜக்ட், 240 கோடி ரூபாய்; பெங்களூரைச் சேர்ந்த, சங்கரா பில்ட்புரோ, 450 கோடி ரூபாய்க்கு பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்ட முடிவு செய்துள்ளன. மேற்கண்ட நான்கு நிறுவனங்களும், பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் வரைவு அறிக்கை தாக்கல் செய்துள்ளன. இந்நிறுவனங்கள், பங்கு வெளியீட்டில் திரட்டப்படும் நிதியை, விரிவாக்கம், கடனை திரும்ப செலுத்துதல் போன்றவற்றிற்கு பயன்படுத்த திட்டமிட்டு உள்ளன. நடப்பாண்டில் இதுவரை, 21 நிறுவனங்கள், பங்கு வெளியிட்டு நிதி திரட்டியுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|