பதிவு செய்த நாள்
03 அக்2016
06:22
புதுடில்லி : ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனத்துக்கு, அதன் பாட்டில் குடிநீரான, ‘ரயில் நீர்’ விற்பனை மூலம், 118.48 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி., ‘ரயில் நீர்’ என்ற பெயரில், குறைந்த விலையில், குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்கிறது. இந்த நிறுவனத்துக்கு, தினமும், 6.14 லட்சம் குடிநீர் பாட்டில் தயாரிக்கும் திறன் உடைய ஆலைகள் உள்ளன. இந்த நிலையில், ஐ.ஆர்.சி.டி.சி., தன், 17வது ஆண்டு அறிக்கையை வெளியிட்டது. அதில், 2015 – 16ம் நிதியாண்டில், பாட்டில் குடிநீர் விற்பனை மூலம், 118.48 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இதுவே, 2014 – 15ம் ஆண்டில், 81.03 கோடி ரூபாய் என்றளவில் தான் இருந்தது.
இது குறித்து, அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்திய ரயில்வேயில், தினமும், 25 லட்சம் குடிநீர் பாட்டில்களுக்கு தேவை உள்ளது. அதில், எங்கள் நிறுவனம், 25 சதவீதம் மட்டும் சப்ளை செய்கிறது. எனவே, எங்கள் விற்பனையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|