பதிவு செய்த நாள்
03 அக்2016
06:28
மியூச்சுவல் பண்ட்களில் பலவிதமான திட்டங்கள் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். முதலீட்டாளர்கள், தங்கள் தேவை மற்றும் நிதி இலக்குகளுக்கு ஏற்ப மியூச்சுவல் பண்ட் திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும். அந்த வகையில், குறுகிய கால இலக்குகளுக்கு முதலீடு செய்ய லிக்விட் பண்ட்கள் ஏற்றதாக கருதப்படுகின்றன. அவசர கால நிதி போன்றவற்றை லிக்விட் பண்ட்களில் முதலீடு செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
லிக்விட் பண்ட் என்றால் என்ன?இவையும் கடன் சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களே. இந்த வகை பண்ட்கள் அரசு பத்திரங்கள், கருவூல பில்கள் போன்ற குறுகிய கால நிதி சாதனங்களில் முதலீடு செய்கின்றன. பெரும்பாலும் 91 நாட்கள் வரை முதிர்வு கொண்ட நிதி சாதனங்களில் இவை முதலீடு செய்கின்றன. எளிதாக பணமாக்கி கொள்ளும் வாய்ப்புடன், அதிக பலன் தரும் வகையில் முதலீடு செய்ய வழிசெய்வதே இவற்றின் முக்கிய நோக்கமாக அமைகிறது. இந்த பண்ட்களுக்கு எண்ட்ரி மற்றும் எக்ஸிட் கட்டுப்பாடுகள் கிடையாது. பெரும்பாலும் இவற்றை ஒரு நாள் அவகாசத்தில் பணமாக்கி கொள்ளலாம். வளர்ச்சி வாய்ப்பு மற்றும் பலவித டிவிடெண்ட் வாய்ப்புகளை இவை கொண்டுள்ளன.
எப்போது நாடலாம்?பொதுவாக குறுகிய கால நோக்கத்துடன் முதலீடு செய்ய இவை ஏற்றவை. மூன்று மாத காலம் வரை முதலீடு செய்ய நினைக்கும் போது இவற்றை நாடலாம். போனஸ் அல்லது ரியல் எஸ்டேட் விற்பனை மூலம் திடீரென கையில் கிடைத்திருக்கும் பெரும் தொகையை எப்படி பயன்படுத்துவது என தீர்மானிப்பதற்கு முன் இவற்றில் முதலீடு செய்யலாம். இவற்றில் ரிஸ்க் குறைவு. ஏற்ற இறக்கங்களும் அதிகம் கிடையாது.
பலன் எப்படி?முதலீட்டாளர்கள் உடனடியாக பணத்தை விலக்கி கொள்ளலாம். அடுத்த பணி நாளில் வங்கி கணக்கில் பணம் சேர்ந்துவிடும். பொதுவான கணக்குபடி, கடந்த ஓராண்டு காலத்தில் இந்த வகை பண்ட்கள் சராசரியாக, 7.7 சதவீத பலனை அளிப்பதாக கருதப்படுகிறது. வங்கி சேமிப்பு கணக்கு வட்டியை விட இது அதிகமானது.
யாருக்கு ஏற்றவை?குறுகிய கால அளவிலான முதலீடு தேவை உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது. கையில் கணிசமான தொகை இருந்து, அதை வைப்பு நிதியில் முடக்கி வைக்க விரும்பாத நிலையில் இவற்றை நாடலாம். சமபங்கு மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்பவர்களும் சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்பர் முறையில் இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் வழியை பின்பற்றி வருகின்றனர். பல நேரங்களில் இவை வைப்பு நிதியை விட மேம்பட்டவை என்றும் கருதப்படுகிறது. வரி விதிப்பை பொறுத்தவரை, மூன்று ஆண்டு காலத்திற்கு மேல் எனில் நீண்ட கால ஆதாய வரிக்கு தகுதியுடையவை. அதற்கும் குறைவான காலத்தில் விலக்கி கொள்ளப்பட்டால், முதலீடு செய்பவரின் வரி வரம்பிற்கு ஏற்ப, டிவிடெண்ட் வினியோக வரிக்கு உட்பட்டவை.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|