பதிவு செய்த நாள்
03 அக்2016
10:38
மும்பை : வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (அக்.,3) இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 155.79 புள்ளிகள் உயர்ந்து 28,021.75 புள்ளிகளாகவும், நிப்டி 55 புள்ளிகள் உயர்ந்து 8666.15 புள்ளிகளாகவும் உள்ளன.
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் நடவடிக்கையை பிரிட்டன் முறைப்படி துவக்கி உள்ளதால் ஆசிய பங்குச்சந்தைகள் புதிய காலாண்டு வர்த்தகத்தை மிக எச்சரிக்கையுடன் துவக்கி உள்ளன. இதன் காரணமாகவும், சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் துவங்கி இருப்பதாலும் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன.
மாருதி, அதானி போட்ஸ், எசர் மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவன பங்குகள் உயர்வுடனும், ஓஎம்ஜிசி, விப்ரோ, இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|