பதிவு செய்த நாள்
21 அக்2016
06:06
பெங்களூரு : கர்நாடக அரசு, அண்டை மாநிலமான, மஹாராஷ்டிராவில், பால் விற்பனையில் களமிறங்கி உள்ளது.
கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு, ‘நந்தினி’ என்ற பெயரில், பால் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. அந்த அமைப்பு, கர்நாடக மற்றும் சென்னையில் பால் விற்பனை செய்கிறது. இந்நிலையில், கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு, மஹாராஷ்டிரா மாநிலத்தில், நந்தினி பால் விற்பனையை துவக்கியுள்ளது.
இது குறித்து, கூட்டமைப்பின் தலைவர் நாகராஜு கூறியதாவது: தற்போது, தினமும், 65 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக, விவசாயிகளுக்கு, 15 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. தற்போது, கர்நாடக மாநிலம் மற்றும் சென்னையில், தினமும், 80 லட்சம் லிட்டர் பால் விற்கப்படுகிறது. மஹாராஷ்டிராவில், 25 லட்சம் லிட்டர் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|