பதிவு செய்த நாள்
21 அக்2016
06:10
புதுடில்லி : ‘‘மத்திய அரசு, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறை வளர்ச்சிக்கு, தொடர்ந்து முழு ஒத்துழைப்பு வழங்கும்,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.
பொதுத் துறையைச் சேர்ந்த, எம்.எம்.டி.சி., நிறுவனத்தின், ‘தங்கவிழா’ நிகழ்ச்சியில், அமைச்சர் பங்கேற்று மேலும் பேசியதாவது:கடந்த, 2014 டிச., முதல், இந்தாண்டு மே வரையிலான, 18 மாதங்களில், நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி தொடர்ந்து சரிந்து வந்தது. ஜூனில் ஏற்றுமதி உயர்ந்த போதும், அடுத்த இரு மாதங்களில், வளர்ச்சி மீண்டும் குறைந்தது. எனினும், செப்டம்பரில் ஏற்றுமதி வளர்ச்சி கண்டுள்ளது.
சர்வதேச பொருளாதார மந்தநிலை, கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால், நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி குறைந்துள்ளது. இந்நிலையில், ஆறுதல் அளிக்கக் கூடிய துறையாக, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறை திகழ்கிறது. இத்துறையின் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. ப்டம்பரில், 446 கோடி டாலர் மதிப்பிற்கு, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 22.42 சதவீதம் அதிகமாகும்.
ஆகவே, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறைக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் அளிக்க, மத்திய அரசு தயாராக உள்ளது. மக்களிடம், தங்க நாணயங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க, எம்.எம்.டி.சி., நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு தழுவிய அளவில், விளம்பர பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|