பதிவு செய்த நாள்
21 அக்2016
10:13
மும்பை : வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று (அக்.,21) இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 6.99 புள்ளிகள் சரிந்த 28,122.85 புள்ளிகளாகவும், நிப்டி 9.20 புள்ளிகள் சரிந்து 8708.60 புள்ளிகளாகவும் உள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததை அடுத்து ஆசிய பங்குச்சந்தைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதும், இந்திய பங்குச்சந்தைகளின் சரிவிற்கு காரணமாக கூறப்படுகிறது.
லுபின், பஜாஜ் ஆட்டோ, டிசிஎஸ், ஹீரோ மோட்டோ கார்ப் உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபமடைந்துள்ளன. அதே சமயம் ஆக்சிஸ் வங்கி, ஹச்டிஎப்சி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ, ஓஎன்ஜிசி ஆகிய வங்கித்துறை மற்றும் எண்ணெய் துறை நிறுவன பங்குகள் சரிவடைந்துள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|