பதிவு செய்த நாள்
21 அக்2016
11:52
மும்பை: ஜியோ வருகையால் தனது வாடிக்கையாளர்களை தக்க வைக்க நாள்தோறும் புதிய திட்டங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் நேற்று புதிய அறிவிப்பு ஒன்றை ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
புதிதாக 4 ஜி மொபைல் வாங்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ரூ.259 கட்டணத்தில் 10 ஜிபி டேட்டாவை வழங்குவதாக அறிவித்துள்ளது. 4ஜி மொபைல் வைத்திருப்பவர்கள் ரூ.259 க்கு ரீசார்ஜ் செய்தால் அவர்கள் அக்கவுண்டில் 1 ஜிபி கிரெடிட் ஆகும். மீதமுள்ள 9 ஜிபியை மை ஏர்டெல் ஆப் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். இந்த டேட்டா 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். ஏர்டெல் இந்த சேவையை மூன்று மாதங்கள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இதுநாள்வரை குஜராத், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் மட்டும் வழங்கி வந்த இந்த சேவையை தற்போது நாடு முழுவதும் ஏர்டெல் நிறுவனம் வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|