பதிவு செய்த நாள்
22 அக்2016
03:35
புதுடில்லி:மத்திய கனரக தொழில்கள் துறையின் கூடுதல் செயலர் அன்ஷூ பிரகாஷ் கூறியதாவது:மத்திய அரசு, ஒருங்கிணைந்த பொறியியல் சாதனங்கள் கொள்கையை விரைவில் அறிவிக்க உள்ளது. இது, அறிவுசார் சொத்துரிமை, இணைய பாதுகாப்பு, தற்போது தொழில்களில் அதிகரித்து வரும் தானியங்கி நடைமுறை உட்பட, அனைத்து நவீன பிரிவுகளின் வளர்ச்சியை உள்ளடக்கியதாக இருக்கும்.
இக்கொள்கை, தயாரிப்பு மற்றும் உற்பத்தி துறையின் மேம்பாட்டுக்கு உதவும்.இந்தாண்டு பிப்ரவரியில், தேசிய பொறியியல் சாதனங்கள் கொள்கை அறிவிக்கப்பட்டது. பொறியியல் சாதனங்கள் சந்தை மதிப்பை, தற்போதைய, 2.30 லட்சம் கோடியில் இருந்து, 2025ல், 7.50 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தும் நோக்கில், இக்கொள்கை உருவாக்கப்பட்டது. பொறியியல் சாதனங்கள் துறையில், நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை, தற்போதைய, 84 லட்சத்தில் இருந்து, மூன்று கோடியாக உயர்த்த, இக்கொள்கை துணை புரியும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|