வரும் மாதங்­களில்...இந்­திய தயா­ரிப்பு துறை வளர்ச்சிஏற்ற, இறக்­க­மின்றி இருக்கும்வரும் மாதங்­களில்...இந்­திய தயா­ரிப்பு துறை வளர்ச்சிஏற்ற, இறக்­க­மின்றி ... ... ரூபாய் மதிப்பில் தொடரும் சரிவு : ரூ.66.92 ரூபாய் மதிப்பில் தொடரும் சரிவு : ரூ.66.92 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பயன்படுத்திய காருக்கு மவுசு அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2016
07:37

இந்­திய சந்­தையில், தொடர்ந்து புதிய கார்கள் அறி­மு­க­மாகிக் கொண்­டி­ருக்­கின்றன. புதிய கார்கள் அதி­க­ரித்து வரும் அதே நேரத்தில், யூஸ்ட் கார் என்று சொல்­லப்­படும் பயன்­ப­டுத்­திய கார்­க­ளுக்­கான மவுசும் அதி­க­ரித்து வரு­கி­றது.
அதி­க­ரிக்கும் பயன்­ப­டுத்­திய கார்­களின் விற்­ப­னையே, இதற்கு சான்று. பயன்­படுத்திய கார்கள் விரும்பி நாடப்­ப­ட, பல கார­ணங்கள் இருக்­கின்­றன. முதன்­மு­றை­யாக, சொந்த கார் வாங்கும் விருப்பம் கொண்­ட­வர்­களில் பலர், புதிய காரின் விலை தங்கள் பட்­ஜெட்டை மீறி இருக்கும் நிலையில், பயன்­ப­டுத்­திய காரை நாடு­கின்­றனர். அது மட்­டு­மல்ல, ஏற்­க­னவே கார் வைத்­தி­ருக்கும் பலரும் கூட, இரண்­டா­வ­தாக ஒரு காரை வாங்கும் தேவையை உணரும் போது, பயன்­ப­டுத்­திய காரை தேர்வு செய்­கின்­றனர். மேலும், பழைய கார் என்று அலட்­சியம் செய்ய முடி­யாத அள­வுக்கு, நல்ல நிலையில் உள்ள கார்­களே பயன்­ப­டுத்­திய கார்­க­ளாக விற்­ப­னைக்கு வரும் நிலை உள்­ளது. ஓராண்­டுக்கும் குறை­வான பயன்­பாடு கொண்ட கார்­களை கூட, பயன்­படுத்­திய கார் சந்­தையில் எளி­தாக வாங்க முடி­கிறது. புதிய காரின் விலை­யோடு ஒப்­பிட்டால், இவற்றின் விலையும் கணி­ச­மாக குறை­வா­கவே உள்­ளன. எனவே, நடுத்­தர வர்க்­கத்தைச் சேர்ந்த பலரும், சொந்த கார் வாங்க முற்­படும் போது, பயன்­ப­டுத்­திய கார் ஏற்­ற­தாக இருக்கும் என, நினைக்­கின்­றனர்.
இப்­படி, பல கார­ணங்­களினால் பயன்­படுத்­திய கார் சந்தை சுறுசுறுப்­பான வளர்ச்சி கண்டு வரு­கி­றது. அதற்­கேற்ப கார் நிறு­வ­னங்­களும், கார் விற்பனை இணை­ய­த­ளங்­களும், இந்த பிரிவில் தனிக்­க­வனம் செலுத்தி வரு­கின்­றன. அதோடு, புதிய கார் வாங்க கடன் வசதி இருப்­பது போலவே, பயன்­ப­டுத்­திய கார்­களை வாங்­கவும் வங்­கிகள் கடன் அளிக்­கின்­றன. பயன்­ப­டுத்­திய கார் வாங்க வங்கிக் கடன் வசதி இருந்­தாலும், தனி­நபர் கடன் வச­தியை விட, அது சிறந்­ததா என, ஒப்­பிட்டு பார்த்து முடிவு செய்ய வேண்டும் என, வல்லு­னர்கள் கூறு­கின்­றனர். வட்டி விகிதம், செயல்­முறை கட்­டணம், கடன் அளவு உள்ளிட்ட பல்­வேறு அம்­சங்­களை பரி­சீ­லிக்க வேண்டும் என்றும் சொல்­கின்­றனர். வட்டி விகி­தத்தை பொறுத்­த­வரை, தனி­நபர் கட­னுக்­கான வட்டி விகிதம், 11.2 சத­வீதம் முதல், 25 சத­வீதம் வரை அமை­கி­றது. பயன்­ப­டுத்­திய கார் கட­னுக்­கான வட்டி விகிதம், 13.1 சத­வீதம் முதல், 20 சத­வீ­த­மாக இருக்­கி­றது. ஒரு­சில சூழலில், தனி­நபர் கடன் வட்டி குறை­வா­ன­தாக இருக்­கலாம். எனினும், இது மாறு­படக் கூடி­யது.
அதே போல, கட­னுக்­கான செயல்­முறை கட்­ட­ணத்­தையும் கவ­னிக்க வேண்டும். தனி­நபர் கட­னுக்­கான செயல்­முறை கட்டணம், 3 சத­வீதம் வரை இருக்க வாய்ப்­புள்­ளது. பயன்­ப­டுத்­திய கார் கடனில், இது குறிப்­பிட்ட சத­வீ­த­மாக அல்­லது நிர்­ண­யிக்­கப்­பட்ட கட்­ட­ண­மா­கவோ இருக்­கலாம். இரண்­டையும் ஒப்­பிட்டு பார்க்க வேண்டும். வங்­கிகள் கார் விலையில், 80 சத­வீதம் வரை கடன் அளிக்க முன்­வரும் நிலையில், எஞ்­சிய தொகையை வாங்­கு­பவர் சொந்தமாக தயார் செய்­தாக வேண்டும். சில நேரங்­களில், காரின் விலைக்கு ஏற்ப, தனி­நபர் கடன் தொகை­யி­லேயே காரை வாங்­கி­விடும் நிலை இருக்­கலாம்.இரு வாய்ப்­பு­க­ளையும் ஒப்­பிட்டு, ஒருவர் தன் நிலைக்கு ஏற்ப பயன்­ப­டுத்­திய கார் கடன் அல்­லது தனி­நபர் கடன் ஆகி­ய­வற்றில், எது சிறந்­த­தாக இருக்கும் என, தீர்­மா­னிக்­கலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)