பதிவு செய்த நாள்
26 அக்2016
07:31
புதுடில்லி : இமாமி நிறுவனம், சிமென்ட் உற்பத்தித் திறனை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
இமாமி குழுமத்தைச் சேர்ந்த, இமாமி சிமென்ட், சத்தீஸ்கர் மாநிலத்தில், ஜூலையில், சிமென்ட் உற்பத்தியை துவக்கியது. இந்த ஆலையின் மூலம், 500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என, தெரிகிறது. இந்நிலையில், இந்நிறுவனம், அடுத்த ஐந்து ஆண்டு களில், சிமென்ட் உற்பத்தித் திறனை, ஆண்டுக்கு, இரண்டு கோடி டன்னாக அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:எங்கள் நிறுவனத்திற்கு, சத்தீஸ்கரில், ஆண்டுக்கு, 55 லட்சம் டன் சிமென்ட் தயாரிக்கும் திறனுடைய ஆலை உள்ளது. மேற்குவங்கம், ஒடிசாவில், 3,500 கோடி ரூபாய் செலவில், இரண்டு அரவை ஆலைகள் அமைக்கப்பட உள்ளன. இத்தகைய விரிவாக்க நடவடிக்கைகளின் மூலம், சிமென்ட் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக, இமாமி திகழும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|