பதிவு செய்த நாள்
27 அக்2016
07:37
புதுடில்லி : மகிந்திரா நிறுவனம், இருசக்கர வாகன விற்பனையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
உள்நாட்டில், ஆண்டுதோறும், 1.65 கோடி இருசக்கர வாகனங்கள் விற்பனையாகின்றன. அதில், ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா, பஜாஜ் ஆகிய மூன்று நிறுவனங்களின் பங்களிப்பே அதிகம். இந்நிலையில், மகிந்திரா, இருசக்கர வாகன விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த, 2008ல், மகிந்திரா நிறுவனம், இருசக்கர வாகனத் துறையில், 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. கடந்த வாரம், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த, இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான, பி.எஸ்.ஏ.,வை, மகிந்திரா கையகப்படுத்தியது. இதன் மூலம், உள்நாட்டில் இருசக்கர வாகன விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. குறிப்பாக, விலை உயர்ந்த இருசக்கர வாகன விற்பனைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|