பதிவு செய்த நாள்
13 நவ2016
01:43
மும்பை;மகிந்திரா அண்ட் மகிந்திரா குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கை:மகிந்திரா குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான, ஆனந்த் மகிந்திரா, பதவி உயர்வு பெற்று, செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மகிந்திரா நிறுவனத்தின் வாகன பிரிவின் தலைவர் மற்றும் மகிந்திரா குழுமத்தின் செயல் இயக்குனரான, பவன் கோயங்கா, நிர்வாக இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பவன் கோயங்கா மற்றும் மகிந்திரா குழுமத்தைச் சேர்ந்த அனைத்து நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்கள், தலைமை செயல் அதிகாரிகள், தலைவர்கள் ஆகியோர், மகிந்திரா குழுமத்தின் தலைவருக்கு, தங்கள் பிரிவுகள் சார்ந்த அறிக்கைகளை தொடர்ந்து அளித்து வருவர். மகிந்திரா குழுமத்தின் அனைத்து செயல்பாடுகள், முதலீடுகள், வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்டவற்றை, செயல் தலைவர் என்ற முறையில், ஆனந்த் மகிந்திரா, தொடர்ந்து மேற்பார்வையிட்டு வருவார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|