பதிவு செய்த நாள்
21 நவ2016
03:40
ஏ.டி.எம்., மையங்களில், ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றாக, மைக்ரோ, ஏ.டி.எம்.,களும் கிராமப்புறங்கள், சிறிய நகரங்களில் பயன்படுத்தப்பட உள்ளன. மைக்ரோ ஏ.டி.எம்.,கள் என்றால் என்ன, அவை எப்படி செயல்படுகின்றன, இவற்றின் மூலம் பெறக்கூடிய சேவைகள் பற்றி ஓர் அறிமுகம்:
கையடக்க சாதனம்!மைக்ரோ, ஏ.டி.எம்., என்பவை, உண்மையில் கார்டு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பயன்படுத்தப்படும், கையடக்க சாதனம் போன்றவை தான். இவை, வங்கிகளின் மைய வங்கி அமைப்புடன் இணைக்கப்பட்டு, கைரேகை ஸ்கேன் செய்யும் வசதியும் பொருத்தப்பட்டிருக்கும். வங்கிகளால் கிளைகள் அல்லது ஏ.டி.எம்., வசதி அமைக்க முடியாத தொலை துார பகுதிகளில், பணம் வழங்குவது உள்ளிட்ட அடிப்படை வங்கிச் சேவைகளை அளிக்க முடியும். இவையும், கடைகளில் பார்க்கும் கார்டு இயந்திரங்கள் போன்றவை தான்.
எப்படி செயல்படுகின்றன?ஏ.டி.எம்., போலவே, இவற்றில் டெபிட் கார்டு (ஸ்மார்ட் கார்டு) பயன்படுத்தலாம். வங்கிகள் நியமித்துள்ள வர்த்தக பிரதிநிதிகள், இவற்றை கையாள்வர். அவர்கள் மூலம் பணம் பெற்றுக் கொள்ளலாம். வர்த்தக பிரதிநிதிகள், வாடிக்கையாளர்களின் அடையாளத்தை உறுதி செய்து கொள்ள, கைரேகை ஸ்கேனிங் வசதி மற்றும் ஆதார் எண்ணை பயன்படுத்திக் கொள்வர். மேலும், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ள, ஐ.ஐ.என்., எனும் ஆறு இலக்க அடையாள எண்ணும் அவசியம். ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கை, இந்த எண் உணர்த்துகிறது.
நோக்கம்!வங்கிச் சேவையை,குக்கிராமங்கள் மற்றும் எளிதில் செல்ல முடியாத தொலைத்துார பகுதிகளுக்கு கொண்டு செல்ல இவை உதவுகின்றன.
சாதகங்கள்: பாதகங்கள்!* ஏ.டி.எம்.,களை விட, இவற்றை நிறுவ ஆகும் செலவு, மிகவும் குறைவானது. எனவே, தொலைத்துார பகுதியில் அமைக்கலாம். கையடக்க சாதனம் என்பதால், எல்லா பகுதிக்கும் கொண்டு செல்லலாம்* ஏ.டி.எம்., என்றாலும், எந்த நேரமும் பணம் பெற முடியாது. வங்கி பிரதிநிதி இருக்கும் போது மட்டுமே, பணம் எடுக்கவோ, பரிவர்த்தனை செய்யவோ முடியும். வங்கி பிரதிநிதி வெளியே சென்று விட்டால் அல்லது கடை அடைக்கப்பட்டிருந்தால் பயன்படுத்த முடியாது.
என்ன வசதிகள்!பணம் செலுத்த, பணம் எடுக்க மைக்ரோ, ஏ.டி.எம்.,களை பயன்படுத்தலாம். பணம் செலுத்துவது என்றால், கார்டை இயக்கிவிட்டு, பணத்தை பிரதிநிதியிடம் வழங்க வேண்டும். பணப் பரிமாற்றம் மற்றும் கணக்கில் மிச்சமுள்ள தொகையை அறியவும், இவற்றை பயன்படுத்தலாம். கடன் வழங்குதல், கடன் வசூலித்தல் போன்றவையும் மேற்கொள்ளலாம். இந்த சேவை பாதுகாப்பானது. அரசு நல திட்ட பயன்களை அளிக்கவும் பயன்படுத்தலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|