இந்­திய சேவை துறையின் ஆத­ர­வின்றிவளர்ந்த நாடு­களின் பொரு­ளா­தாரம் நக­ராதுஇந்­திய சேவை துறையின் ஆத­ர­வின்றிவளர்ந்த நாடு­களின் பொரு­ளா­தாரம் நக­ராது ... ரூபாயின் மதிப்பும் சரிந்தது ரூபாயின் மதிப்பும் சரிந்தது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
மைக்ரோ ஏ.டி.எம்.,கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2016
03:40

ஏ.டி.எம்., மையங்­களில், ரூபாய் நோட்டு தட்­டுப்­பாட்டை சமா­ளிக்கும் வகையில், மேற்­கொள்­ளப்­பட்டு வரும் பல்­வேறு நட­வ­டிக்­கை­களில் ஒன்­றாக, மைக்ரோ, ஏ.டி.எம்.,களும் கிரா­மப்­புறங்கள், சிறிய நக­ரங்­களில் பயன்­ப­டுத்­தப்­பட உள்­ளன. மைக்ரோ ஏ.டி.எம்.,கள் என்றால் என்ன, அவை எப்­படி செயல்­ப­டு­கின்­றன, இவற்றின் மூலம் பெறக்­கூ­டிய சேவைகள் பற்றி ஓர் அறி­முகம்:
கைய­டக்க சாதனம்!மைக்ரோ, ஏ.டி.எம்., என்­பவை, உண்­மையில் கார்டு பரி­வர்த்­த­னை­களை மேற்­கொள்ள பயன்­ப­டுத்­தப்­படும், கைய­டக்க சாதனம் போன்­றவை தான். இவை, வங்­கி­களின் மைய வங்கி அமைப்­புடன் இணைக்­கப்­பட்டு, கைரேகை ஸ்கேன் செய்யும் வச­தியும் பொருத்­தப்­பட்­டி­ருக்கும். வங்­கி­களால் கிளைகள் அல்­லது ஏ.டி.எம்., வசதி அமைக்க முடி­யாத தொலை துார பகு­தி­களில், பணம் வழங்­கு­வது உள்­ளிட்ட அடிப்­படை வங்கிச் சேவை­களை அளிக்க முடியும். இவையும், கடை­களில் பார்க்கும் கார்டு இயந்­தி­ரங்கள் போன்­றவை தான்.
எப்­படி செயல்­ப­டு­கின்­றன?ஏ.டி.எம்., போலவே, இவற்றில் டெபிட் கார்டு (ஸ்மார்ட் கார்டு) பயன்­ப­டுத்­தலாம். வங்­கிகள் நிய­மித்­துள்ள வர்த்­தக பிர­தி­நி­திகள், இவற்றை கையாள்வர். அவர்கள் மூலம் பணம் பெற்றுக் கொள்­ளலாம். வர்த்­தக பிர­தி­நி­திகள், வாடிக்­கை­யா­ளர்­களின் அடை­யா­ளத்தை உறுதி செய்து கொள்ள, கைரேகை ஸ்கேனிங் வசதி மற்றும் ஆதார் எண்ணை பயன்­ப­டுத்திக் கொள்வர். மேலும், வங்­கிகள் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கி­யுள்ள, ஐ.ஐ.என்., எனும் ஆறு இலக்க அடை­யாள எண்ணும் அவ­சியம். ஆதார் எண் இணைக்­கப்­பட்ட வங்கிக் கணக்கை, இந்த எண் உணர்த்­து­கி­றது.
நோக்கம்!வங்கிச் சேவையை,குக்­கி­ரா­மங்கள் மற்றும் எளிதில் செல்ல முடி­யாத தொலை­த்துார பகு­தி­க­ளுக்கு கொண்டு செல்ல இவை உத­வு­கின்­றன.
சாத­கங்கள்: பாத­கங்கள்!* ஏ.டி.எம்.,களை விட, இவற்றை நிறுவ ஆகும் செலவு, மிகவும் குறை­வா­னது. எனவே, தொலை­த்துார பகு­தியில் அமைக்­கலாம். கைய­டக்க சாதனம் என்­பதால், எல்லா பகு­திக்கும் கொண்டு செல்­லலாம்* ஏ.டி.எம்., என்­றாலும், எந்த நேரமும் பணம் பெற முடி­யாது. வங்கி பிர­தி­நிதி இருக்கும் போது மட்­டுமே, பணம் எடுக்­கவோ, பரி­வர்த்­தனை செய்­யவோ முடியும். வங்கி பிர­தி­நிதி வெளியே சென்று விட்டால் அல்­லது கடை அடைக்­கப்­பட்­டி­ருந்தால் பயன்­ப­டுத்த முடி­யாது.

என்ன வச­திகள்!பணம் செலுத்த, பணம் எடுக்க மைக்ரோ, ஏ.டி.எம்.,களை பயன்­ப­டுத்­தலாம். பணம் செலுத்­து­வது என்றால், கார்டை இயக்­கி­விட்டு, பணத்தை பிர­தி­நி­தி­யிடம் வழங்க வேண்டும். பணப் பரி­மாற்றம் மற்றும் கணக்கில் மிச்­ச­முள்ள தொகையை அறி­யவும், இவற்றை பயன்­ப­டுத்­தலாம். கடன் வழங்­குதல், கடன் வசூ­லித்தல் போன்­ற­வையும் மேற்­கொள்­ளலாம். இந்த சேவை பாது­காப்­பா­னது. அரசு நல திட்ட பயன்­களை அளிக்­கவும் பயன்­ப­டுத்­தலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)