பதிவு செய்த நாள்
24 நவ2016
14:53
மும்பை : நாட்டின் முதல் பேமென்ட் வங்கியை ஏர்டெல் நிறுவனம் ராஜஸ்தானில் துவங்கி உள்ளது. ஏர்டெல் பேமென்ட் வங்கியில் கணக்கும் வைக்கும் வாடிக்கையாளர்களுக்கு 7.25 சதவீதம் வட்டி வழங்கப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள வங்கிகளிலேயே அதிகபட்ச வட்டி விகிதம் இதுவாகும். தற்போது வரை பெரும்பாலான வங்கிகள் 4 சதவீதம் மட்டுமே வட்டி அளித்து வருகின்றன.
இதற்கு முன் ஏர்டெல் வாலட் முறையிலான 'ஏர்டெல் மணி' என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. முதல் பேமென்ட் வங்கிக்கான அனுமதியை ரிசர்வ் வங்கி அளித்ததை அடுத்து தற்போது பேமென்ட் வங்கி சேவையிலும் ஏர்டெல் அடியெடுத்து வைத்துள்ளது. இது பற்றி ஏர்டெல் பேமென்ட் வங்கியின் சிஇஓ சசி அரோரா கூறுகையில், வங்கி சேவை என்ற மிகப் பெரிய திட்டத்தின் மூலம் அடுத்த கட்டத்திற்கு பயணித்துள்ளோம். முதல்கட்டமாக சோதனை நடவடிக்கையாக ராஜஸ்தானில் இந்த வங்கி துவங்கப்பட்டுள்ளது. படிப்படியாக இது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றார்.
ஏர்டெல் பேமன்ட் வங்கியில் பணத்தை சேமிக்க மட்டுமே முடியும். ஏடிஎம் அல்லது டெபிட் கார்டுகள் வழங்கப்பட மாட்டாது. குறிப்பிட்ட சில ஏர்டெல் கிளைகளில் மட்டும் ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொள்ளலாம். பேமென்ட் வங்கி என்பது ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனின் கனவு திட்டமாக இருந்தது.
ஏர்டெல் பேமன்ட் வங்கியில் கணக்கு துவங்குவோருக்கு ஏர்டெல் மொபைல் இணைப்பு வழங்கப்படுகிறது. இந்த மொபைல் எண், வங்கி கணக்கு எண்ணாக கருதப்படுகிறது. இந்த வங்கியின் செயல்பாடு முற்றிலும் டிஜிட்டல் மயமாகவும், பேப்பர் இல்லாததாகவும் அமைக்கப்பட உள்ளது. கணக்கு துவங்குவதும் ஆதார் அடிப்படையிலான இ கேஒய்சி முறையிலேயே துவங்கப்பட உள்ளது. ஏர்டெல் வங்கி சேவைகள் அனைத்தும் ஏர்டெல் மொபைல் ஆப்ஸ் வாயிலாகவே வழங்கப்பட உள்ளது. சந்தேகங்கள் பெறுவதற்கு 400 என்ற எண்ணிற்கு போன் செய்தால், வாய்ஸ் சேவை மூலமே கலந்துரையாடல் நடத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|